அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 31, 2007

இனியெல்லாம் சுகமே....


ஞானியரின் ஞானத்தை கேள்!
அவசர இரைச்சல் இடையே
அமைதியாக செல்
மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்.

உன் உண்மையை
இதமாகத் தெளிவாகக் கூறு
பிறர் கூறுவதை கவனி.
மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை உண்டு.

பிறருடன் ஒப்பிட்டால்
உனக்கு கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு.
உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி,
அதே போல் உன் திட்டங்களையும்
மகிழ்ச்சியுடன் அணுகு.

உன் வாழ்வின் பாதை
எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்.
கால மாற்றங்களில்
இதுவே உனது நிரந்தர செல்வம்.

நீ
நீயாக இரு.
அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
அன்பை ஏளனப்படுத்தாதே.
எல்லா விரோதங்களுக்கும்.
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
-இரண்டாம் சொக்கன்....

Sunday, December 23, 2007

பொன்மனசெம்மல்.....


மறைந்தும் மறையாத மக்கள் தலைவனின் 20 வது நினைவு நாள் இன்று....
We miss U...Thalaivaa....






Tuesday, December 18, 2007

தொப்பைய குறைக்கனுமா....?









இந்த வீடியோவை பார்த்தாவெல்லாம் தொப்பை குறையாது...இது மாதிரி தினமும் செஞ்சா ஒரு வேளை குறையலாம்....

வீட்ல இம்சை தாங்கலை...அதான் எப்டி பண்றாய்ங்கன்னு வலை மேய்ஞ்சப்ப சிக்கினது....சரி எல்லாருக்கும் யூஸ் ஆவட்டுமேன்னு போட்ருக்கேன்.....

(இப்டில்லாம் பதிவு போட்டா சிறந்த வலைப்பதிவர்னு பட்டம் குடுப்பாங்களா...?)

Monday, December 17, 2007

ரீமிக்ஸ்...







யாருங்க இது?...தெரிஞ்சா சொல்லுங்கப்பா !



மொதல்ல இந்த பாட்ட பாருங்க...ரஜினின்னு ஒருத்தர் தலைவி மணிஷாவோட ஆடியிருக்கறதா வெளியில சொல்லி தெரிஞ்சிகிட்டேன்.....ஏன்னா இன்னிக்கு வரை அந்த பாட்டுல மணிஷாவை மட்டுந்தான் பார்த்திருக்கேன்...ஹி..ஹி

ஆனா இந்த பதிவுக்கு அது மேட்டர் இல்லை....இந்த பாட்டை பாடியிருக்கிற பாடகி யார்?, அந்த காலத்து ராஜேஸ்வரியையும்,இடைக்காலத்து ஜென்சியையும் குழைத்து தந்தது போல குரல் வண்ணம்.தெளிந்த நீரோடை போல தடங்கலில்லாமல் பாடும் இவர் வேறு பாடல்கள் ஏதும் பாடியிருக்கிறாரா அல்லது One song wonder..ஆ...

வெவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க புண்ணியமா போகும்....

Saturday, December 15, 2007

பில்லா பாடல்கள்....பாருங்க...!

மை நேம் இஸ் பில்லா....



வெத்தலைய போட்டேண்டி...

Wednesday, December 12, 2007

செருப்பால் அடித்துக் கொல்(ள்ள)ல வேண்டும் போலிருக்கிறது...

நேற்று மகாகவி பாரதியின் 125ம் பிறந்த நாள்....பத்திரிக்கைகளில் அரசு விழா நடப்பதற்கான ஒரு விளம்பரம் மட்டுமே காணக்கிடைத்தது.வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ மூச்ச்ச்ச்...ஒரு சத்தமும் கானோம்.

இன்றைக்கு உச்ச நட்சத்திரத்தின் பிறந்தா நாளாம், தெருவெங்கு வினைல் பேனர்கள் என்ன, கொண்டாட்டங்கள் என்ன... அ.தி.மு.க வினரே வெட்கப்படுமளவிற்கு FM வானொலியெங்கும் மகாத்மா ரேஞ்சிற்கு பில்ட்டப்புகள் என்ன, புகழ்ச்சிகள் என்ன...தொடர்ந்து ஒரு வாரமாய் விஜய் டிவியில் இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் என்ன...

இத்தனைக்கும் அந்த மனிதர் தன் பிறந்த நாளுக்கு இங்கே இருப்பதில்லை,இத்தனை பயல்களுக்கும் பெப்பே காட்டிவிட்டு தன்பாட்டிற்கு எங்கேயோ கொண்டாடி மகிழ்கிறார். கேட்டால் இமயமலையில் இருக்கிறாராம்.....

உண்மையில் திரு.சிவாஜிராவ் கெயிக்வாட் ஒரு தேர்ந்த வியாபாரி அவ்வளவே....ஆனால் நம்முடைய விசிலடிச்சான் குஞ்சுகளும், ஊடகங்களும்....அவர் தமிழகத்தையே ரட்சிக்கவந்த காவல்தெய்வமாய் பயாஸ்கோப் காட்டுகின்றனர்.

தமிழன் எங்கே போகிறான்....

மீண்டும் த‌லைப்பை ப‌டியுங்க‌ள்.....

Monday, December 10, 2007

வாழ்க நீ எம்மான்...




எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல‌

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்...

கிஙபிஃஷரின் கிளுகிளுப்பு காலண்டர் 2008

கிளுகிளுப்பான கிங் ஃபிஷர் 2008 காலண்டர் இன்னிக்கு ரிலீஸ் பண்ணீட்டாங்கப்ப்போய்....Atul Kasbekar ங்ற கொடுத்து வச்ச போட்டோ க்ராபர்தான் இந்த அழகிகளை படம் பிடிச்சிருக்கார்....

எப்படி எடுத்தாய்ங்கன்னு வீடியோ வேற காட்டி டென்சனாக்குறாய்ங்க...நான் மட்டும் வயிறெறிஞ்சாப் போதுமா...ஹி..ஹி..எல்லாரும் பாருங்க மக்கா....















Wednesday, December 5, 2007

சுப்ரபாதம் ரீமிக்ஸ்.....



நம்ம எம்.எஸ் அம்மா பாடின சுப்ரபாதத்தையும் ரீமிக்ஸ் பண்ணீட்டாங்க....கேக்க நல்லாத்தான் இருக்கு...கேட்டுப்பாருங்க....

கறுப்பு நாள்......



திசம்பர் 6, 1992.....

பதினைந்து ஆண்டுகள் கழித்தும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.நமது அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பில்லை என்பதை தோலுறித்துக் காட்ட இந்த தேசம் கொடுத்த மிகப்பெரிய விலை பாபர் மசூதி....

இன்றைக்கு நகரெங்கும் காணக்கிடைத்த தட்டி விளம்பரத்தில், ஞாயிற்றுக் கிழமையென்றும் பாராமால் யாருக்காகவோ நீதிமன்றம் நடத்தி கண்டனக்கனை தொடுத்த நீதிதேவதைகள் இந்த விடயத்தில் தூங்கிக்கொண்டிருப்பதாக கூற்ப்பட்டிருப்பது நிதர்சனம்தானே.....

ம்ம்ம்ம்....

Saturday, December 1, 2007

நேற்றைய புலம்பல்கள்....

நம்ம தமிழ்நதி வலைச்சரத்தில் அவரை கவர்ந்த கவிதைகளையும், கவிதையாளர்களையும் வரிசை கட்டியிருந்தார்.....என்ன வழக்கம் போல நம்ம பேர் லிஸ்ட்ல இல்லை(ரொம்ப நெனப்புதான்...ஹி..ஹி..)

இருந்தாலும் நாம ஒரு முன்னாள் கவிதையாளன்(என்ன கொடுமையிது...) என்பதை நிரூபிக்க பல வருடங்களுக்கு முன்னால நாம கடைசியா எழுதின கவிதைய சபையில வைக்கிறேன்....

இது கற்பனையா எழுதுனதுனெல்லாம் கப்ஸா விடமாட்டேன்....அனுபவிச்சி ஃபீலிங்க்ஸோட எளுதினதாக்கும்....

"படிச்சிட்டு அவ அழுத கண்ணீர் இன்னமும் ஈரமாய் எனக்குள்....ம்ம்ம்ம்"

ஒரு காலத்தில் நாமளும் கவிதையெல்லாம் எழுதியிருக்கோம்னு நினைச்சா ஆச்சர்யமாத்தான் இருக்கு....

எப்படியிருக்குன்னு படிச்சிட்டு சொல்லுங்க.....






பூவே என்னை தள்ளாதிரு...


..........ம்ம்ம்ம்ம்ம்

சூழ்நிலையால விலகினோமா

இல்லை

வசதிக்காக விலகினோமா

காரணிகள்(factors) காரணமாயிரம் சொல்லலாம்

கொஞ்சம் தளர்ந்துதான் போய்விட்டோம்

இதுவரை இப்படி இருந்ததில்லையே

ஏன் விலகினோம் உயிரே....

மீண்டும் மிருகவேஷம் போட்டு

பரபரப்பாய் திரிகிறேன்

யாரை ஏமாற்றுகிறேன் தெரியவில்லை.....

உணர்வுகளை தள்ளி வைக்கலாம்

உயிரை தள்ளி வைக்கமுடியுமா

வைத்திருக்கிறேனே.....

எப்படி இதெல்லாம் எனக்கு மட்டும்
சாத்தியமாகிறது.....

நீ கேட்ட போதெல்லாம்

வராத கவிதை இப்போது
மட்டும் எப்படி சரளமாய்...

காதலில் தோற்றுவிட்டேனோ

ம்ம்ம்ம்ம்ம்........

Friday, November 30, 2007

நம்ம ஸ்டைல்ல....ICL விளம்பரம்...



இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு போட்டியா ஜீ டிவி ஆரம்பிச்சிருக்கிற ICL நேற்று முதல் போட்டிய ஹரியானாவில் வெற்றிகரமா நடத்தீட்டாங்க....

விரைவில் நாடெங்கும் நடக்கும்னு சொல்லீருக்காங்க....

நம்ம ஆளுங்கள கவர் பண்ண நம்ம சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல ஒரு விளம்பரம் வந்திருக்கு...பார்த்து எஞ்சாய் பண்ணுங்க....

சேரப்போறாங்களாமே...அப்படியா?

கடந்த சில தினங்களாய் சூரியன் எஃப் எம் மில் வரும் ஒரு விளம்பரம்.....

பிரிந்தவர்கள் சேரப்போறாங்க...

அப்படியா யாருங்க...?

ஓ அவங்களா..!


இந்த ரீதியில் ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது...சரி எதுக்கோ பில்ட்டப் குடுக்கறாங்க போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்....

இன்னிக்கு காலையில திடீர்னு ஒரு யோசனை அதாவது...இரண்டு மூணு மாசமா ரூ.310 ல தள்ளாடிட்டு இருந்த சன் டிவியோட பங்ககுகள் கடந்த இரண்டு நாள்ல மட்டும் 15%க்கு மேல உயர்ந்திருக்கு....

ஏனுங்க தெரியாமத்தான் கேக்றேன்...ஏதும் காம்ப்ரமைஸ் ஆயிருப்பாங்களா....?

ஹி..ஹி..தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.....

Tuesday, November 27, 2007

மதுரைக்கு போகாதேடி.....



சமீப நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடல்..நான் தான் கேட்கிறேன் என்று நினைத்தால் சென்னை FM களில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இந்தபாடலை கேட்க முடிகிறது.

அழகிய தமிழ் மகனுக்காய்...A.R.ரஹ்மான் வார்த்தெடுத்த எங்க ஊர் பாட்டு இது...

அது என்ன எங்க ஊர் பாட்டுன்னு கேக்கறீங்களா...இந்த பாட்டில் பின்னனியில் வரும் தாளக்கட்டு...ஆதிய்ம் அந்தமுமாய் மதுரக்காரய்ங்களுகே உரித்தான பரம்பரை சொத்து....வாடிப்பட்டி செட் இந்த தாளத்தை வாசிக்கும் போது ஈரக்குலையே அதிரும்,சொல்லிப் புரியவைக்கமுடியாது அந்த அனுபவத்தை...அனுபவிக்கனுமய்யா...அதையெல்லாம்...ம்ம்ம்ம்

எனக்குத் தெரிந்து ரஹ்மான் முதல் தடவையா நாட்டுப்புற பாடலை அதற்கே உரித்தான காரம் மணம் குணத்தோடு தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

கடந்த வாரம் இந்த பாடலோடுதான் மதுரை,திருச்சி, தஞ்சை என சுற்றினேன்.....இன்னும் சலிக்கவில்லை...

நீங்களும் கேட்டுப்பாருங்கள்......

Monday, November 26, 2007

Crying In The Rain



நமக்கும் இங்கிலிபீஸ் பாட்டுக்கும் கொள்ளை தூரம்...ஆனாலும் அப்பப்ப சில பாட்டு மனசுல தச்சிரும்...அந்த வகையில இந்த பாட்டும்...

இதை நினைவுபடுத்தற மாதிரி தமிழ்பாட்டு யாராவது சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்....

Friday, November 23, 2007

சத்யசாய் @ 82



பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலில் நிழலே தெய்வம்...



பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்....



பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது
குள்ளம் தான் உயரத்தினை வடிவமைக்கிறது
இல்லாததை இருப்பதுதான் காட்டுகிறது....

வெள்ளிவிழா ட்ரைவர்...!

தலைப்பு குறிப்பிடும் வெள்ளிவிழா ஆசாமி நாந்தேன்....ஆரம்பத்துலயே சொல்லீர்றேன்,இது ஒரு தற்பெருமை பதிவு...இதுக்கு மேல ரிஸ்க் எடுத்து படிக்கிறது உங்கபாடு.....

என்ன பண்றது எல்லாம் ஒரு வெளம்பரந்தான்.....ஹி..ஹி

மொத மொதலா வண்டி ஓட்ட ஆரம்பிச்சி இப்ப இருவத்தி அஞ்சு வருசமாச்சு..அதை கொண்டாடத்தான் இந்த பதிவு!

பண்ணிரெண்டு வயசுல ஏதோ தைரியத்துல அப்பாவோட அம்பாஸிடர ஸ்டார்ட் பண்ணி ஓட்றேன் பேர்வழின்னு காம்பவுண்ட் சுவர்ல மோதி சுவர் இடிஞ்சி, பூத்தொட்டியெல்லாம் நொறுங்கி, ஹெட்லைட் கண்ணாடி சுக்கல் சுக்கலாக, அதற்கு கொஞ்சமும் குறையாமல் அப்பாவினால் டின் கட்டப்பட்டதுதான் நமது அரங்கேற்றம்.

அன்னிக்கு ஆரம்பிச்ச கார் பித்து இன்னிக்கும் ப்ஃரெஷ்ஷா இருக்கு!...கொஞ்சம் கூட கொறயல...அன்னிக்கு அப்பா அடிச்சப்ப என்ன பெரிய்ய காரு, நான் பெரிய ஆளாகி நாலு கார் வாங்குவேன்னு அன்னிக்கு வச்ச வைராக்கியம்...ஹி..ஹி..இப்ப நிஜம்.

கார்களின் மீதான ஈர்ப்பு எப்போது எதனால் துவங்கியது என நினைவில்லை, ஆனால் கார்களை பற்றிய விவரங்களை சேகரித்து வைப்பதும், நண்பர்கள் மத்தியில் நுணுக்கங்களை வாய்கிழிய பேசி படங்காட்டுவதில் ஒரு போதை இருந்ததாகவே நினைத்தேன்....நினைக்கிறேன்.

முதல்முதலில் சொந்தமாய் கார்வாங்கிய போது எனக்கு சுத்தமாய் மகிழ்ச்சியே இல்லை, காரணம் சொன்னால் டென்சனாவீர்கள்....மொத மொதல்ல போயும் போயும் ஒரு சின்ன கார போய் வாங்கறோமேன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்...

ஹி..ஹி..என்ன செய்றது அப்போதைக்கு மாருதி800 தான் ஒரே புதிய கார்...அப்புறம் ஆண்டொன்று போனால் வயதொன்று போவது மாதிரி கார்கள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.

மறக்கமுடியாத சில கார் அனுபவங்களென்றால்....

வீட்டுக்குத்தெரியாமல் எத்தனையோ நாட்கள் கொடைக்கானலுக்கும், ராமேஸ்வரத்துக்கும் நண்பர்க்ளுடன் சுற்றிய நாட்கள்...எத்தனை பேர் தனுஷ்கோடியில் உள்ள ஆளரவமற்ற கடற்கரகளில் நடு இரவில் படுத்துக் கிடந்திருப்பிர்க்ள்....பேரிரைச்சலோடு பேய்த்தனமாய் வீசியெறியும் அந்த கடற்கரையில் பௌர்னமி இரவுகளில் பேசிக்களிக்கும் போது கூட தூரத்தில் சாலையில் தனியே நிற்கும் அந்த அம்பாஸிடரின் அழகு....

சென்னை மதுரைக்கு இடையில் எத்தனை முறை போய் வந்திருப்பேன் என கணக்கே இல்லை, நினைத்த மாத்திரத்தில் கிளம்பிவிடுவேன்,....அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் மருத்துவமனையில் அனுமதி என்கிற செய்தி கேட்டு வேறெந்த நினைவும் வராது மதுரைக்கு பறந்தது இன்றைக்கும் நம்பமுடியாத பயணம்,எப்படி போனேன் என இன்னமும் நினைவில்ல்லை...அம்மா..அம்மா...அம்மா மட்டுந்தான் நினைவில் இருந்தது. வெறும் ஆறு மணி நேரத்தில் மதுரையை அடைந்திருந்தேன்.

ஒரு காலத்தில் அதிதீவிரமாய் ச்சாட்டிக் கொண்டிருந்த காலத்தில் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவில் செட்டிலானவர், நெம்ப க்ளோஸ்...ஹி..ஹி...திருச்சிக்கு போகும் போது எனக்காக கொஞ்சநேரம் பாலத்தில் வண்டியை நிறுத்தி நின்று அந்த காவிரிக் காற்றை ஸ்வாசித்து விட்டு போ என்கிற அன்புக்கட்டளை, இப்போது அவர் தொடர்பில்லாவிட்டாலும் ஆறேழு வருடங்களாய் அந்த தோழியில் ஏக்கத்தை நிறைவேற்றியே வந்திருக்கிறேன்...இனியும்.....

ஒரு முறை திருப்பூரில் தொழில் நிமித்தமாய் சுற்றிக்கொண்டிருந்த போது அப்போது புதிதாய் சந்தைக்கு வந்திருந்த மிட்சுபிஷி லான்சர் காரை வைத்துக்கொண்டு டெஸ்ட் ட்ரைவ் பண்ணச் சொல்லி இம்சை பண்ணிய விற்பனை பிரதிநிதியுடன் கோயமுத்தூர்வரை டெஸ்ட் ட்ரைவ் பண்ணி அவரை கதற்விட்டதும்.....பின்னர் அந்த வண்டியை டெலிவரி எடுத்தபோது அந்த மேளாளரிடம் என்ன செய்வீர்களோ தெரியாது, இந்த வண்டி விற்றதற்கான ஊக்கத் தொகை அந்த திருப்பூர்காரர்களுக்கு கிடைத்தாக வேண்டுமென அடம்பிடித்ததும்,ஊக்கத்தொகை கிடைத்ததை தொலைபேசியில் அவருடன் பேசி உறுதி செய்ததும் சந்தோஷத் தருணம்.

எத்தனை நாளைக்குத்தான் கார் ஓட்டுவது என எண்ணி ஆவடி HVFல் ஏலத்துக்கு வந்த ஒரு ராணுவ ஜீப்பை ஏலத்தில் எடுத்து நிறைய செலவு பண்ணி ஆறேழு மாதம் சுற்றியது ஒரு அனுபவம்.சும்மா சொல்லக் கூடாது அது குதிரை, வீட்டில் பலத்த எதிர்ப்பு வரவே விற்க வேண்டியதாயிற்று.

தெரிந்த ஒருவரிடம் இருந்த டிசைனர் ஜீப் இருந்தது, அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென ஆசைப்பட்டேன்...நடிகர் அஜீத் குமார் என் ஆசையில் மண்ணை போட்டார்...ஹி..ஹி...

என் அப்பாவுடன் காரில் போவது மட்டும் இன்றைக்கும் அலர்ஜியான விஷயம்...ஹி..ஹி..பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ட்ரைவ் பண்ணுவார்....அதாவது ஏன் இந்த கியர்ல போறே,இப்படி ஓட்டு, எதுக்கு இத்தனை வேகம்..னு இம்சையாக்கிருவார்...இதுல பெரிய சோகம் என்னனா...யாராவது பொண்ணுங்க அவங்க பாட்டுக்கு போனாலும்...இவர்...டேய்..வேடிக்கை பார்க்காம நேர பார்த்து வண்டிய ஓட்டுன்னு மிரட்டுவார்....அவர் இப்படிச்சொல்லும் போது கார்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க...எனக்கு பத்தீட்டு வரும்...ஹி..ஹி...

இப்படி நிறையவே பட்டியலிடலாம்....

சில அதிபயங்கர விபத்துக்களை சில அடி தூரத்தில் கண்டதும், துடிக்கத் துடிக்க உயிர் போவதை கையாலாகமல் பார்த்ததும் உண்டு. மயிரிழையில் மிக மோசமான விபத்துக்களில் இருந்து தப்பியியுமிருக்கிறேன். இருந்தாலும் காரோட்டுவது ஒரு வகையான தவமாகவே தெரிகிறது. தனியே காருக்குள் அது எனக்கான உலகம் என்கிற ஈர்ப்பும், அது தரும் நிறைவும் அனுபவித்தால் மட்டுமே புரியும் உணர்வுகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலில் ஏற்பட்ட மிக மோசமான சரிவினால் கடன்களையும், கமிட்மெண்ட்களையும் தீர்க்க கையிலிருந்த எல்லாவற்றையும் விற்றுத் தீர்த்த நிலையில் காரை மட்டும் விற்க மனது வரவில்லை...ஒரு கட்டத்தில் காரையும் விற்றாக வேண்டிய சூழல்.... கவச குண்டலத்தை இழந்த கர்ணனை போல...என்னுடைய பலமெல்லாம் போய்விட்டதை போன்று உணர்ந்த நாளது.

மலிவான காரொன்றை வாங்கலாமென தீர்மானித்தாலும், செகண்ட் ஹேண்ட் கார் வாங்க மனமொப்பவில்லை....டாட்டா இண்டிகா வாங்கலாமென்றால் முன்பணம் கட்டக்கூட கையில் காசில்லை...பதினைந்து நாட்கள் ஆட்டோவில் காலந்தள்ளினேன்..என்னுடைய சுற்றமெல்லாம் ஆளுக்கு இரண்டு கார்களாவது வைத்திருந்தனர்....யாரும் என்னிடம் கேட்கவில்லை...நானும் யாரிடமும் போகவில்லை.

ஒரு வழியாய் பணம் புரட்டி 95% கடனில் டாட்டா இண்டிகாவை புக் பண்ணினேன். காரை டெலிவரி எடுக்கப் போக வேண்டும், கையில் ஆட்டோவிற்கு கூட காசில்லை....அதற்கு ஆறுமாதத்திற்கு முன்னால் 400க்கும் அதிகமானோர் பணிபுரிந்த நிறுவனத்தின் முதலாளி....கோடிக்கணக்கில் விற்றுவரவு செய்து கொண்டிருந்தவன்.முழுத் தொகையும் ஒரே செக்கில் கொடுத்து கார் வாங்கிய திமிரோடு இருந்தவன்.

ஹைகமாண்ட் கொடுத்த ஐநூறு ரூபாயுடன் டெலிவரி எடுக்க ஆட்டோவில் போன அந்த பயணம் வலிநிறைந்தது, என்றைக்கும் மறக்க்காது....அந்த பயணத்தின் போது தோன்றிய சிந்தனைகளே இன்றும் வழிநடத்துகிறது என நினைக்கிறேன்....இடறி விழுதல் யாருக்கு சாத்தியமே...இடறி விழுவதால் ஒரு போதும் சிங்கம் நரியாகிவிடாது....நான் இன்னமும் சிங்கம்தான்...நிதானித்து சிலிர்த்தெழ அவகாசமிருக்கிறது...இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை...இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே போனேன்.

ஐந்து வருடங்கள் கழித்து இன்றைக்கு என்னிடம் நாலு கார்கள் இருக்கிறது....இது அதிகம்தான், தேவையில்லைதான்...ஆனாலும் ஒரு வெறி...என்னை நிரூபித்துக் காட்டிய வெறி....எனக்கு பிடித்ததற்காய் ஒரு டொயோட்டா இன்னோவாவும், ஹைகமாண்டுக்கு பிடித்த மாருதி ஸ்விஃப்ட், நம்ம ஜுனியர்க்கு பிடித்ததற்காய் ஒரு மாருதி வேகன் ஆர்...இது போக என் கஷ்டத்தில் கூட இருந்த என் இனிய டாட்டா இண்டிகா.

எனக்கு பெட்ரோல் கார்கள் சுத்தமாய் பிடிப்பதில்லை....அவையெல்லாம் பெண்கள் ஓட்டத்தான் லாயக்கு என நினைத்துக் கொண்டிருக்க்கிறேன்...டீசல் வண்டிகள்தான் Manlyயானவை, அவைதான் என் ஃபேவரைட்...குதிரை மாதிரி இருக்கவேண்டும்.என்னுடைய அனுபவத்தில் அத்தகைய உணர்வினை தந்த ஒரே வண்டி Opel Astraதான்....

அநேகமாய் இந்திய சந்தையில் உலாவரும் அத்தனை வண்டிகளையும் ஓட்டியாயிற்று,ஸ்கொடா மட்டுமே பாக்கி...

இப்போது அடுத்த கட்டமாய் வெளிநாட்டு கார்களை ருசிபார்க்கும் ஆவல் எட்டிப் பார்க்கிறது.அதே சமயத்தில் எத்தனை நாள்தான் அடுத்தவன் செய்யற கார்ல போறது, நம்ம கார நாமளே செஞ்சி ஓட்டணும்னு ஒரு ஆசை இருக்கு, சீக்கிரத்துல வேலை ஆரம்பிக்கணும் ...ஹி..ஹி...விடமாட்டம்ல....

(கொஞ்சம் ஓவராவே ஃபிலிம் காட்டீட்டேன்னு நினைக்கிறேன்...ஹி..ஹி...ஏதோ சின்ன பையன் தலைகால் தெரியாம‌ ஆடறான்னு பெரிய மனசோட மன்னிச்சிருங்க....)

Tuesday, November 20, 2007

பஹவான் ஸ்ரீராமசந்திரமூர்த்தி பற்றிய புதிய தகவல்கள்



பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி அவர்களின் திரு அவதார தினம் ஜனவரி 10, 5114

பா.ஜ.க வின் குலதெய்வமான சக்கரவர்த்தி திருமகனார் தனது 39ம் வயதில் மஹாக்கேவலமான அரக்கர் குல அரசன் ராவணனை வீழ்த்தினார்.

இதெல்லாம் நான் சொல்லலீங்க...நம்ம சென்னையைச் சேர்ந்த திருவாளர் ஹரி என்பவர் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சி அதை மும்பையில போய் வெளியிட்டிருக்கிறார்.

வெவரமா படிக்க இங்கன போங்க.....

Wednesday, November 7, 2007

தீபத்திருநாள் வாழ்த்துக்கள்....



.....திறமை கொண்ட தீமை யற்ற தொழிபு ரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி, ஞான மெய்தி வாழ்வ மிந்த நாட்டிலே
வாழி கல்வி செல்வ மெய்தி மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரு மொருநிகர் - சமான மாக வாழ்வமே.....
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்........

Tuesday, November 6, 2007

இப்படியும் ஒரு மருத்துவம்....!

கொஞ்ச நாளைக்கு முன்னால இதயம் நல்லெண்ணை நிறுவனம் "ஆயில் புல்லிங்"(Oil Pulling) பத்தி விளம்பரம் செய்ததனை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பீர்கள் என தெரியவில்லை. பண்டை தமிழர்கள் இதை செய்து நோய் நொடியின்றி வாழ்ந்ததாகவெல்லாம் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு தங்கள் நல்லெண்ணையை வாங்கி உயயோகிக்கும் படி கூறினர். அப்போது ஏதோ விளம்பர உத்தி என நினைத்தாலும் சமீபத்தில் அது குறித்த ஒரு தமிழ் புத்தகத்தை படிக்க நேர்ந்தது....புத்தகம் கிடைக்கும் முகவரி பதிவின் இறுதியில்....

காலையில் வெறும் வயிற்றில் இந்த எண்ணையை வாயில் ஊற்றி கொப்பளித்து துப்புவதுதான் ஆயில் புல்லிங்....இதனால் பல உடற்கோளாறுகள் தீர்வதாக இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாதாரண இருமல் சளி முதல் புற்றுநோய் வரை குணமாவதாக இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்.இந்த நூலின் ஆசிரியல் ஒரு மருத்துவர் எனவும் தனது பல நோயாளிளுக்கு இந்த சிகிச்சையின் மூலம் குணமளித்துள்ளதாக விரிவாக விளக்குகிறார்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த டாக்டர்.மெத்கராஷ் என்பார் தனது நோயாளிகளுக்கு சூரிய காந்தி எண்ணணயை கொப்பளிக்க கொடுத்து பல நோய்களை குணமாக்கியதாக இந்த நூலாசிரியர் கூறுகிறார்.குறிப்பாக ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இது அருமருந்து என குறிப்பிடுகிறார்.

இந்த ஆயில் புல்லிங்கை எப்படி செய்யவேண்டுமென ஆசிரியரின் வரிகளையே தருகிறேன்....

....தூய்மை செய்யப்பட்ட்ட(ரிஃபைண்ட்) சூரியகாந்தி எண்ணையாவது, வேர்கடலை எண்ணையோ, நல்லெண்னையோ(எள் எண்ணை) இரண்டு தேக்கரண்டி அதாவது பத்து மில்லி லிட்டர் அளவிற்கு வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.ஆனால் விழுங்கி விடாதீர்கள்.பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு வாய் முழுவதும் கலந்து திரியும்படியாக கொப்பளியுங்கள்.தாடை சற்று உயர்த்தி இருக்கட்டும்.இடையில் பற்களின் இடைவெளிகளுக்கூடு செல்லுமாறும் கொப்பளியுங்கள்.தொண்டைக்குள் கொண்டு செல்ல வேண்டாம்.இப்படியே பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள்.முதலில் வாய் முழுவதும் வழவழவென்று உள்ளதைப்போல் காணப்படும்.சில நிமிடங்கள் கழித்துப் பின்னர் அது நீர்த்துப் போய் வாயினுள் எளிதாக நகர்கிறது. 15 நிமிட நேரத்தில் எண்ணை நுரைத்து வெண்மையாகி நீர்த்துப் போகிறது.அப்போது அதை உமிழ்ந்து விடுங்கள்.வெள்ளையாக இல்லாமல் எண்ணண மஞ்சளாக இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும்.உமிழ்ந்து விட்ட பின்னர் வாய் கொஞ்சம் நுரைத்த வழவழப்புடன் உள்ளதைப் போல காணப்படும்.ஒன்றிரண்டு நிமிடங்கள் நுரையினை உமிழ்ந்து போக செய்து இரண்டாம் முறை உமிழுங்கள்.அப்படி உமிழ்ந்த பிறகு வாயை நான்கைந்து முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பற்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.இதனால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கிருமிகள், கேடு விளைவிக்கும் பொருள்கள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன......

இதை விடியற்காலையில் வெறும் வயிற்றில் பல் தேய்த்த பிறகு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்குமாம். அதிக பட்சம் தினமும் மூன்று தடவை செய்யலாமென்கிறார் இந்த நூலாசிரியர்.ஆனால் வயிறு காலியாக இருக்க வேண்டுமென வ்லியுறுத்துகிறார்.

நல்ல பலன் இருக்குமென அடித்துக் கூறுகிறார் நூலாசிரியர்....எளிய வைத்தியம் செய்து பார்க்கலாமே....

இனி நூலின் விவரங்கள்...

வியத்தகு எண்ணெய் மருத்துவம்
ஆசிரியர் - தூம்மல் கோட்டேசுவரராவ்
கிடைக்குமிடம்
செல்வி பதிப்பகம்
25,இரண்டாம் தெரு
லூர்து சாமி குடியிருப்பு
காசாமலை, திருச்சி-620023
தொலைபேசி:0431 - 2420568

Sunday, November 4, 2007

சிங்கத்தின் அறிக்கை...!

எங்கியாச்சும் சிங்கம் அறிக்கை விடுமான்னெல்லாம் அசட்டுத்தனமா கேக்கப்டாது. ஆனா இந்த அறிக்கையை சிங்கந்தான் விடுது...சரியா...யார் சிங்கம்னு இன்னேரம் புரிஞ்சிருக்கணுமே.....ஹி..ஹி..

என்னிய நானே சிங்கம்னு சொல்லிக்காட்டி வேற யாரு சொல்லுவா?....அதுனால மறுபடியும் நானே சொல்லிக்கறேன்...நான் சிங்கந்தான்...ஹி..ஹி...சரி, எதுக்கு இம்புட்டு பில்டப்னு தோணுமே.....தோணீருச்சா....வெளக்கமா அறிக்கைய படிங்க...

அதாகப்பட்டது கடந்த சில வருடங்களாய் தினமும் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உழைப்பதைப்(?) போல நடித்ததால்(!)...சிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு வந்திருச்சி...கொஞ்ச நஞ்சமில்லை 110 - 150,... இம்புட்டு ச்சின்ன வய்சுல(?) இது ஆவாதாமே...நெம்பவே பயமுறுத்தீட்டாய்ங்க சிங்கத்த....

இனி சென்னை செந்தமிழ்....

பத்து நாளைக்கு முன்னால..அப்டிக்கா வள்ளுவர் கோட்டத்தாண்ட ட்ரைவ் பண்ணிகினு இருந்தப்ப...திடீர்னு பின் மண்டைல ஜிவ்வுனு சூடாகி உடம்பெல்லாம் ஒரு மாதிரி இறுக்கம் பரவி படபடப்பா..கண்ணெல்லாம் மங்கி...என்னாடா இது புது ஃபீலிங்கா இருக்கேன்னு நெனக்கச்சொல்ல...குப்புனு வேர்வை...ஆஹா ஹார்ட் அட்டாக்தான் வந்திருச்சோன்னு டவுட் ஆகி...சரி தங்கமணிய கூப்ட்டு மரண வாக்குமூலம் கொடுத்துரலாம்னு டிசைட் பண்ணி வண்டிய ஓரங்கட்டச்சொல்ல...ஸ்லோவா ரெக்கவர் ஆயிடுச்சி....

இருந்தாலும் ஹைகமாண்டு கைல ரிப்போர்ட் பண்ணீரலாம்னு கூப்டா அடுத்த பிஃப்டீன் மினிட்ஸ்ல பஸ்ல பிக்பாக்கட் அடிச்சவனை அள்ற மாதிரி தம்பியும், தங்கமணியும் நம்மள கொத்தா அள்ளீடாங்க....அந்த ஸ்பாட்லயே பிபி பார்த்துட்டு தங்கமணி டென்சனாயிருச்சி, மவனே சொன்னா கேக்கறியான்னு புலம்பீட்டே நாலஞ்சு மாத்திரைய கொடுத்து முழுங்கச்சொல்ல முழுங்கித் தொலைசேன்...அடுத்த ஒன் அவர்ல...ஈ.சி.ஜி...எக்கோன்னு என்னன்னவோ டெஸ்ட்...எல்லாம் நார்மலாத்தான் இருக்கு...பிபி மட்டுந்தான்னு தெரிஞ்ச்ப்புறந்தான் தங்கமணியோட பிபி நார்மலாச்சு.

அப்புறமென்ன..தங்கமணி நம்மள பேஷண்ட்னு டிக்ளெர் பண்ணி வூட்டுக்கு இட்டுகினு போய்டானுங்க....ரெண்டு மூணு நாளா மாத்திரைய முழுங்கறதும்...தூங்கறதும்...தங்கமணி பிபி பார்த்துட்டு கண்ணை உருட்டி மிரட்றதுமா பொழுது போச்சி.....லாப்டாப், செல்போன் எல்லாம் ச்சீஸ் பண்ணீடாய்ங்க...கம்ப்யூட்டர் பக்கம் போனா கம்ப்யூட்டர தூக்கி வெளிய எறிஞ்சிடுவேன்னு அன்பான அறுதல்கள்.....அதச் செய்யாதா...இதை செய்யாதேன்னு...ஜெயில் வார்டன் ரேஞ்சுக்கு இம்சை....நம்மோட மோசமான எதிரிக்கு கூட டாக்டர் பொண்டாட்டி கிடைக்கக் கூடாதுன்னு அப்ப சின்சியரா வேண்டிக்கிட்டேன்...ஹி..ஹி...

இருந்தாலும் சைக்கிள் கேப்ல நம்ம வர்த்தகப் பதிவுகளை மட்டும் தங்கமணிக்கு தெரியாம அப்டேட் பண்ணீட்டு இருந்தேன்....பிபி ஒரு வழியா நார்மலாக, ஒரு சுப வேளையில் கார்டியாலஜிஸ்ட் கிட்ட போனேன்(இழுத்துக் கொண்டு போனார்கள் என்பதுதான் உண்மை.). தங்கமணி அவருக்கு நிறைய கேஸ் ரெஃபர் பண்ணுவதால் ரொம்ப உரிமை எடுத்துக்கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்(எரிச்சலாக்கினார்) என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.(ஹி..ஹி..அறிக்கை)

தண்ணி அடிப்பியா?....தம் அடிப்பியா?...வாக்கிங் போறியா?..எக்ஸர்ஸைஸ் பண்ணுவியா?..ன்னு கேக்க கேக்க சமத்தா இல்லைன்னு தங்கமணி பதில் சொல்ல நான் மாடு மாதிரி தலையை ஆட்டி அமோதித்துக் கொண்டிருந்தேன்.ஒரு கட்டத்தில் கெட்ட பழக்கம் ஒன்னுமேயில்லையா?...நீங்க ர்ர்ரொம்ம்ப லக்கின்னு தங்கமணிக்கு ஐஸ் வைக்க தங்கமணிக்கு ஒரே பெருமை...அப்புறமா நம்ம வேலை விவகாரங்களை விசாரிக்க ஆரம்பிக்க..நாம நாலஞ்சி தொழிலை கட்டி மாரடிக்கறதை சொல்ல டாக்டர் பிரகாசமானார்.

ஸ்ட்ரெஸ்...ஸ்ட்ரெய்ன்...னு...ஆரம்பிச்சு ஒரு மினி லெக்சர்...ரொம்ப அக்கறையா இந்த காதுல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டிருந்தேன்.நீங்க ட்ரைவர் வச்சிருக்கீங்கள்ல...னு கேட்க,நான் ரொம்ம்ப பெருமையா செல்ப் ட்ரைவிங்கதான்னு...சொல்ல, தங்கமணியை டாக்டர் பார்க்க என் செல்ஃ ட்ரைவிங்க்கு அந்த இடத்தில் ஆப்பு வைக்க முடிவு செய்யப்பட்டது. அட்டோகார்-இ...கார்டேஸ்...டெல்சார்ட்டான்-ஹச் என வரிசையாக மாத்திரைகளை எழுதி ஒரு மாதம் கழித்து வந்து பார்க்கச்சொன்னார்.எல்லாம் இரவில் போட வேண்டும்.

ஒரு வழியாக எல்லாம் நார்மலாகி தங்கமணி வைத்த மிக கடுமையான ஃபிட்னஸ் டெஸ்ட்டில் பாஸாகி பொது வாழ்க்கைக்கு திரும்பிய இரண்டாவது நாளில் தவறுதலாய் இரண்டு டெல்சார்ட்டான் -ஹெச் மாத்திரைகளை முழுங்கித் தொலைக்க பங்குச்சந்தையைப் போல பிபி சரிந்தது...ஹி..ஹி..அதாவது 60-80...மறுபடியும் வீட்டுச்சிறையில்....இப்பத்தான் ரெண்டு நாளைக்கு முன்னால மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டேன் என்பதை கோடனகோடி(?) அன்பர்கள் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரிவித்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

வரும் நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எழுத்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட உத்தேசித்திருக்கிறேன் என்கிற எச்சரிக்கையை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிக்கையை இன்னும் நல்லா எளுதீருக்கலாம்...ம்ம்ம்....அப்புறம் மொதல்ல சொன்ன சிங்கம் மேட்டர சீரியஸா எடுத்துக்காதீங்க....அரசியல்ல இதல்லாம் சஹஜமப்பா....கண்டுக்காதீங்க....

அல்லாரும் உடம்ப பாத்துக்கங்க...ப்ளீஸ்

Saturday, November 3, 2007

எப்டி இருந்த நமீதா...இப்ப.....ம்ஹும்


எப்படி இருந்த நமீதா....



இப்ப இப்படி இருக்கார்....

(ஹி..ஹி..பதிவு போட்டு நெம்ப நாளாச்சா....அதான் ஆரும் நம்மள மறந்துடக் கூடாதுன்னு இப்டிக்கா ஒரு அட்டெண்டன்ஸ்...ஹி..ஹி...வர்ட்டா....)

Thursday, October 18, 2007

இவரை யார் தண்டிப்பது.....!

ஒரு பிரபல தமிழ் நடிகர், இன்னொரு மிகப்பிரபல நடிகரின் மகளுக்கிடையேயான அலைபேசி உரையாடலை இன்று கேட்க நேர்ந்தது....இந்த ஒலித்துணுக்கு கடந்த சில நாட்களாய் இனையத்தில் உலவிவருவதை எத்தனை பேர் அறிவீர்கள் என தெரியவில்லை....

மிகவும் கீழ்தரமான நோக்கத்துடன், திருமணம் நிச்சயமான அந்த பெண்ணை தொலைபேசியில் பாலியில் ரீதியாய் துன்புறுத்தும் இந்த பேச்சுவார்த்தையின் போது அந்த பெண்ணின் தாயாரும் உடனிருக்கிறார்.அவர் அறியா வண்ணம் தாயிடம் நல்ல பிள்ளை மாதிரி பேசி அவர் அனுமதியுடன் பெண்ணிடம் அபாச அர்ச்சனை செய்வதை தொலைபேசியில் பதிவும் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுடன் தான் பாலியல் உறவு கொண்டதாய் கூறி அதை அவர் வாயால் ஒப்புக்கொள்ளச்செய்து பின்னர் அவரை ப்ளாக்மெயில் செய்ய திட்டமிட்ட ஒரு சதிகாரனின் பேச்சாகவே அவரது பேச்சின் தொனி காணப்படுகிறது.கையறு நிலையில் அந்த பெண் கெஞ்சுவது பரிதாபமாய் இருக்கிறது.

இந்த நடிகர் சமீபத்தில் இன்னொரு நடிகையுடனான தனது தொடர்பினையும் அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.

இப்போது அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் போக்கில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த பேச்சுவார்த்தையை இனையத்தில் கசியவிடுவது யார் செயலாய் இருக்குமென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்....

இம்மாதிரியான மனவிகாரம் படைத்தவர்களை சட்டத்தின் வழி தண்டிக்க இயலுமா தெரியவில்லை...அதே நேரத்தில் இன்றைய நவநாகரீக மங்கையர் சுதந்திரம் என்கிற பேரில் வரம்பு மீறிவிட்டு பின்னர் இப்படி அல்லாடுவது தேவைதானா என்கிற கேள்வியும் எழாமலில்லை.

வயதின் வேகத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பின்னர் இவ்வாறு அவமானப்படுவது தேவைதானா....தனக்கு எல்லாம் கொடுத்து தன்னை சீராட்டி பாராட்டிய பெற்றோருக்கு இவர்கள் தரும் வெகுமதி தாங்கவெனா அவமானமும் மனவேதனையும்தான்....

வெளிவேஷம் போடும் அந்த நடிகர் மிகக்கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவரே...

இவரை யார் தண்டிப்பது...

சம்பந்தப்பட்ட ஒலித்துணுக்கை இங்கே இனைக்கலாம்தான்...ஆனால் மிகுந்த வேதனை தரும் அந்த உரையாடலை எனது சக பதிவர்கள் என் வழியாய் கேட்க வேண்டாமென தோன்றுவதால் தரவில்லை.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Monday, October 15, 2007

விளங்கிய அறிவு....!




'மனோலயம் பெற்றால் மனிதன் 'மனோநாசம்' பெற்றால் ஞானி.
'புவியீர்ப்பு விசை' கடந்து, புறவெளியில் உலவுவதுபோல்
'புலன் ஈர்ப்பு விசை'யைக் கடந்து அகவெளியில் உலவும் அறிவு
புவியில் பொருளாகவோ வினையாகவோ, கடன் வைக்காமல்,
வெட்ட வெளியில் வெளியேறும் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவு'

Thursday, October 11, 2007

சொக்கனான...மாயாவி!

அன்புடையீர்...

ஏற்கனவே மாயாவி என்கிற பெயரில் பதிவர் ஒருவர் செயல்படுவதை அறியாது எனது பதிவிற்கும் அதே பெயரை வைக்க நேர்ந்தது. தற்போது குழப்பத்தினை தீர்க்கும் வகையில் மாயாவி என்கிற இந்த பதிவின் பெயர் 'சொக்கன்' என அழைக்கப்படும்...

அதாவது என்னுடைய பதிவுகளை படித்து நீங்கள்லாம் சொக்கிப் போய்டனும்னு வச்சிக்கிட்ட பெயர்...ஹி..ஹி...

-சொக்கன்

வெளம்பரம்



Idea cellular phone நிறுவனத்தின் சமீபத்திய வெளம்பரம்....நல்ல ஐடியால்ல....

என்சாய்...

Monday, October 8, 2007

நானுந்தான்.....

போன வாரம் மதுரையில் ஒரு நாள்

ஒரு பெரிய வங்கி காலை நேர பரபரப்பில் திணறிக்கொண்டிருக்க....

நான் ஒரு காசோலையுடன் High Value Clearence மூலமாய் அதை உடனடியாய் பணமாக்க வேண்டிய அவசரத்துடன் அணுக, நடைமுறைகளை ச்சுட்டிக்காட்டி என்னை வெறுப்பேற்றிய ஊழியரை எகிறிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஊழியர் ப(க)ணிவாய் மேளாளர் அறைக்கு வருமாறு அழைத்தார்.

மவனே இருடா! வந்து உன்ன வச்சிக்கறேன்னு கருவிக்கொண்டே அறைக்குள் நுழைந்தால், என்னை அழைத்த அந்த பெண்தான் அந்த கிளையின் மேளாளர்.முப்பதுகளில் பொலிவாய் இருந்த அவரை ரசிக்கிற மனநிலையில் நான் இல்லை...அவசரத்தில் இருந்தேன்.உட்காரச்சொல்லி பிரச்சினனயை கேட்டார்...காசோலையை வாங்கிப் பார்த்து பிரச்சினையில்லை நான் பார்த்துக்க்கொள்கிறேன், நீங்கள் சலான் ஃபில்லப் பண்ணிதாருங்கள் என ஒரு சலானையும் தந்தார்.

இது மரியாதை, என குஷியாகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கும் போது அவர் கேட்டார்....

நீங்க சரவணண்தானே...!

குழப்பமாய் நிமிர்ந்து ஆமென்றேன், அடுத்து .... பையண்தானே என கேட்க ஆச்சர்யமாய் உங்களுக்கு எங்க அப்பாவை தெரியுமாவென கேட்டேன்.சிரித்துக் கொண்டே ஏன் உங்களை தெரிஞ்சிருக்க கூடாதா! என கேட்டவர், என்னை தெரியலையா நான் ....னை என்றார்.

ஹி..ஹி..இந்த இடத்துல ஷாட் கட் பண்ணி ஒரு இருவது வருசம் பின்னால போவோமா!

பதினேழு வயசு வரை அவனுக்கு சைட் அடிக்கறதப் பத்தி பெரிசா எதுவும் தெரியாது ...அம்புட்டு சமத்து, காலைல எல்லா பசங்களும் 8.30 பஸ்ஸில தொங்கிட்டு வரும் போது அவன் மட்டும் மக்கு மாதிரி 8 மணி பஸ்ல உக்காந்து போவான்.டெய்லி க்ளாஸ்க்கு போற முதல் பையன் அவன்தான்.. பைய க்ளாஸ்ல வச்சிட்டு நேர சர்ச்சுக்கு வந்து தனியா உக்காந்திருப்பான்.பாவமன்னிப்பு கேக்க வர்றவங்களை வேடிக்கை பார்க்கறது அவனுக்கு பிடிச்ச அப்போதைய பொழுது போக்கு.8.30 மணி பஸ்ல வர்றவனையெல்லாம் கிறுக்குப் பயலுகன்னு நெனச்சிட்டு இருந்தான் அவன், அதே மாதிரி சாயங்காலம் எல்லாப் பயலும் பஸ்ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கும் போது அவன் முதல் பஸ்ஸுல வீட்டுக்கு போயிருவான்.

ப்ளஸ்2 வந்தப்பதான் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சது அவனுக்கு...ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் அவன் ஏரியாவுல இருக்கிற இரண்டு பொண்னுங்களை லவ் பண்றதாயும்,அவங்க யாரு, பின்னனி என்னன்னு சொல்ல முடியுமான்னு கேக்க...முதலில் பயந்தாலும் அப்புறம் ஆர்வ கோளாறில் சரி வர்றேன்னு போனான்.

அந்த நாள் அவனுக்கு இன்னிக்கும் மறக்க முடியாது...காதல் படத்துல வருமே அந்த ஸ்கூல் பொண்ணுங்கதான் அவங்க, அதில் ஒருத்தியை அவன் பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்தான். ஆனாலும் பயம்...தினமும் அந்த தேவதையை பார்க்க நண்பர்களுக்கு உதவும் சாக்கில் அவனும் அவர்களோடு ஜோதியில் ஐக்கியமானான். அவனுக்கு அந்த தேவதை அவனை மட்டும் விசேடமாய் பார்ப்பதாயும் சிரிப்பதாயும் தோன்றியது. ஒரு கட்டத்தில் நண்பர்கள் கண்டுபிடித்துவிடவே ஒரு உடன்படிக்கை தயாரானது...மூணு பேரும் ட்ரை பண்ணுவோம் யாருக்கு கிடைக்குதோ மத்தவன் ஒதுங்கிக்கனும்னு.....வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான்.

ஆனால் திருட்டுதனமாய் நண்பர்களுக்கு தெரியாமல் அந்த தேவதையின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்....சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு அவளை எப்படி அணுகுவது என்றெல்லாம் திட்டம் போட்டாலும் தைரியம் இல்லை.ஒரு வேளை வீட்டுக்கு தெரிந்தால், அவள் முடியாது என சொல்லி அவர்கள் வீட்டில் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டால் என நிஜங்களை நினைத்து பயந்தான், ஆனாலும் அவளை எப்படியாவது தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியத்துடன் ப்ளஸ்2 நெருக்கடிகளுடன் போராடினான்.

அம்மா அதிரடியாய் அவனது பின்னனியில் இருந்ததால் ஓரளவு நல்ல மதிப்பெண்களுடன் மூன்று துறைகளும் கிடைக்க மதுரையில் பொறியியல் சேர்ந்தான்.அவனது இரு நண்பர்களும் தேர்வில் பரிதாபமாய் சோடை போனது இன்றும் அவன் வருந்தும் விஷயம்.புதிய சூழல்,புதிய நண்பர்கள்,புதிய பெண்களின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய் தேவதையின் நினைப்பு கரைந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் படிச்சிமூடிச்சி செட்டிலானவுடன் வீட்டில் சொல்லி அவளை துனைவியாக்க வேண்டுமென அரசியல்வாதி போல நீண்டகால திட்டம் ஒன்றை தீட்டினான்.

இங்கன ஷாட் கட் பண்ணிடுவோமா....

வ்வாவ்...அடையாளமே தெரியல என்றேன் நிஜமான ஆச்சர்யத்துடன்.பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார் அந்த பெண்.வாழ்க்கையில் எப்போதோ பேசவேண்டும் என துடித்த பெண்ணிடம் இப்போதுதான் பேச முடிகிறது. சம்பிரதாயமாய் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.நான் நிறைய மாறிவிட்டதாக கூறினார்,நானும் சிரித்துக் கொண்டே அவரும் நிறைய மாறிவிட்டதாய் பொய் கூறினேன்...நிஜத்தில் நான் அவரை மறந்திருந்தேன் என்பதுதான் உண்மை.

விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தபோதுதான் கிறுக்குத்தனமாய் அந்த எண்ணம் தோன்றியது. மீண்டும் அவர் அறையை பாதி திறந்து உள்ளே எட்டிப் பார்க்க அவர் நிமிர....

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே...என சஸ்பென்ஸ் வைத்தேன். அவர் சிரித்தபடியே கண்ணாடியை உயர்த்தி என்ன என்பது மாதிரி பார்த்தார்....

நான் வாழ்க்கையில லவ் பண்ணின முதல் பெண் நீங்கதான் என்றேன்...சிரித்துக் கொண்டே தலை கவிழ்ந்து பைல்களை புரட்டிக் கொண்டே அவர் சொன்னார்....

நானுந்தான்....

சட்டென என்ன சொல்லதென தெரியவில்லை....

இறுக்கம் பரவ...வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு....God bless you...takecare...bye என்றேன் அவரும் சிரித்துக் கொண்டே அதை ஆமோதிக்க திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன்.

மனசு லேசாய் இருந்தாலும் கனமாய் இருந்தது.

நான் ஏன் நட்சத்திரமாகவில்லை....

இந்த வார நட்சத்திர பதிவர் வலை பதியவந்த ரெண்டாவது மாசத்துலயே இந்த நட்சத்திர பதிவராயிட்டாங்ன்னு படிச்சப்பத்தான் ஒரு விசயம் நச்சுன்னு உறைச்சது...அதாவது...நாம கூட மூனாவது வருசமா எளுதறோமே, எங்க ஏரியாவுல நீங்க ஒரு வாரமாவது நச்சத்திரமா இருகனும்னு ஒரு ஈ..காக்கா கூட அழுது புலம்பலையேன்னு.....

யார் யாரோ மொக்கை பதிவர், தக்கை பதிவர்ன்னு சொல்லிக்கிறாங்க...நான் எம்புட்டு பெரிய மொக்கையா/தக்கையா இருந்திருந்தா நம்மள இத்தன நாளா லூஸ்ல விட்ருப்பாங்க...ஹி..ஹி...இது வரைக்கும் இது குறித்து எனக்கு பெருசா வருத்தமெல்லாம் வந்ததில்லை.

இப்ப மனசுல பட்டதை வெளிப்படையா சொல்லியாச்சி...இனி எதிர்காலத்துல எல்லாரும் எழுதிமுடிச்சப்புறம் வேற அள் கிடைக்கலைன்னா நம்மளை கூப்டாலும் கூப்டலாம், ஆனா எனக்கு பெரிசா அதுல இஷ்டமில்லை....

ஏன்னா...நம்ம சிவாஜிக்கு கூட கடைசி வரை தேசிய விருது கிடைக்கலியாமே!...ஹி..ஹி..அது மாதிரி நம்ம மாயாவிக்கும் தமிழ்மணத்துல நட்சத்திரமாகிற வாய்ப்பு கடைசிவரை கிடைக்கலியாம்னு வரலாறு சொல்லனும்...அதான் நம்ம ஆசை

அப்டியாவது நான் பெரிய ஆளாயிட்டு போறேனே!....தயவு செய்து அதை நிறைவேத்த உதவுங்கப்போய்....ஹி..ஹி...

(யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை....குறிப்பாக இந்தவாரபதிவர் வள்ளியை....)

Monday, October 1, 2007

ஆண்மையா அரைவேக்காட்டுத்தனமா....

சேது சமுத்திர திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைக்கும் போது பின்னாளில் தங்களின் பிழைப்புக்கு வழிகோலும் பிரச்சினையாக மாறுமென மதவாத அரசியல் கட்சிகளும்(வாதிகளும்) கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

தங்களின் பாரம்பரியங்களை கட்டிகாப்பாற்றும் இவர்களுக்கு அமெரிக்க நாசா சொல்லும் வரையில் இந்த பாலம் இருந்ததே தெரியாது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு முன்னர் வரை இவர்கள் இதை 'ஆடம்ஸ் ப்ரிட்ஜ்' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.தரைக்கு கீழே ஓடும் சரஸ்வதி நதியை பற்றி எழுதிவைத்த புராணங்கள் இந்த பாலம் இந்த இடத்தில் மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியினால் கட்டப்பட்டது என குறித்து வைக்காமல் போனது மிக துர்பாக்கிய நிகழ்வு.

சற்றேறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென மூக்கு வியர்த்து காவியும் கமண்டலமுமாய் கிளம்பி ராமேஸ்வரத்திற்கு கள்ள ரயிலேறி வந்து தங்களின் பக்தியையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திச் சென்றவர்களுக்கு, இந்த பிரச்சினைதான் மீண்டும் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் என தெரிந்ததும் பாலத்தை வைத்து குரங்கு வித்தை காட்டத் துவங்கியதும் அதை உசுப்பிவிடும் வகையில் நமது முதல்வரவர்கள் அரைவேக்காட்டுத் தனமாய் ஒரு கருத்தைச் சொல்லப் போக பிரச்சினை சுருசுருவென பற்றிக்கொண்டு விட்டது.

இந்த திட்டத்திற்காய் உடல்பொருள் ஆவியெல்லாம் தருவேன் என தமிழகமெங்கும் மேடையேறி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த 'வைக்கோ' நிச்சயமாய் அம்னீஷியாவினால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடை தீர்மானமான கருத்து. இல்லையென்றால் இன்னேரம் துள்ளிக்குதித்து தெருவிற்கு வந்திருப்பார்தானே...நம்முடைய துரதிர்ஷ்டம் இலங்கை தமிழர்களுக்கு இடரென்றால்தான் அவரது தசையாடும் போலும்.

இந்த திட்டம் வந்தால் முதலில் பவழப்பாறை திட்டுக்கள் எல்லாம் அழிந்து போய் சுற்றுப்புற சூழல் மாசுபடுமென கவலைப்பட்டு இயற்கை ஆர்வலராய் அவதாரமெடுத்த நம்து முன்னாள் முதல்வர் அருமைத் தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்கள் பின்னாளில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்த காண்டத்தை அநேகமாய் எல்லோரும் மறந்திருப்பீர்கள் என்கிற தைரியத்தில் இந்த வழியாக் கப்பல் போனால் செலவு கூடுமென பொருளாதார நிபுணராகி திட்டத்தை இப்போது எதிர்க்கிறார்.

குடும்பத்தில் குழப்பம், கூட்டணியில் குத்துவெட்டு வீட்டுக்குள் வேகத்தை காட்டமுடியாத தலைவர் தன் கோவத்தையும், எரிச்சலையும் சபையில் ராமர் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் காட்டி பிரச்சினைக்கு மேலும் தீ வார்க்கிறார்.

இயற்கையில் உருவான மணல் திட்டு என நிலவியல்,கடலியல் துறை வல்லுனர்கள் கூவிக்கூவி சொன்னாலும் எந்த மடையன் காதிலும் விழவில்லை. அவனவனுக்கு அவனவன் கஷ்டம்...அதை வெளியில் சொல்லமுடியாமல் கொள்கை, வெங்காயம், பண்பாடு என கூத்தடிக்கின்றனர்.

காண்ட்ராக்டர்களிடம் வாங்கிய கமிஷனுக்காய் ஒருவர், வருமானம் போய்விடுமே என்கிற அச்சத்தில் இலங்கையில் இருந்து வரும் நெருக்கடிக்கு விலை போய் கூச்சலிடும் ஒருவர்..எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென நினைக்கும் புண்ணியவதி, மதத்தின் பெயரால் மக்களை மடையர்களாக்கி பதவி சுகம் காண நினைக்கும் இந்துத்வவியாதிகள்...இருக்கிற ஆட்சியதிகாரத்தை காப்பாற்ற எந்தளவும் கீழிறங்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள், இவர்களுக்கிடையில் முந்திரிக்கொட்டையாய் கருத்துச் சொல்லும் நீதிமான்கள்....

மொத்தத்தில் அனைவருக்கும் தங்கள் சொந்த லாபநஷ்டங்களே முன்னால் நிற்கின்றன. இதைத்தான் பொதுநலமென வாய்ஜாலமாய் விற்றுக்கொண்டிருக்கின்றனர். நாம் அரை வேக்காடுகளாய் ஆளுக்கொரு பக்கம் நின்று லாவனி பேசிக்கொண்டிருக்கிறோம்.

300 மீட்டர்/அடிக்கு ஒரு மணல் திட்டை அகற்றுவதால் தமிழகத்தில் ஆறு கடற்கரையோர மாவட்டங்களில் தொழில்வாய்ப்பும்,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,கடலூர் போன்ற துறைமுகங்களுக்கு நன்மையும் இதனால் அரசிற்கு கணிசமாய் வருவாயும், கப்பல்களுக்கு எரிபொருள் சேமிப்பும் வருவதை தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்காய் வீறுகொண்டெழுந்து வீதி நாடகம் போடும் இவர்களையா ஆண்மையாளர்கள் என்பது...அரைவேக்காடுகளா! விழித்துக் கொள்ளுங்கள்.

Wednesday, September 26, 2007

Hydrogen கார்கள் ஒரு அறிமுகம்



சல்லிசா கார் ஓட்டலாம் வாங்க...

பெட்ரோல்,டீசல் விலை கட்டுபடியாகாத நிலையில் இனி எதிர் காலத்தில் ஓடும் Hydrogen கார்கள்தான் மாற்றாக இருக்கும்.இந்த குறும்படம் அது குறித்த ஒரு அறிமுகமாய் இருக்கும். விவரமறிந்தவர்கள் மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளலாமே...

Monday, September 17, 2007

தர்பூஸ்தான்...நம்புங்க

இது இங்கில்லை....ஜப்பானில். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.



நிறவெறியும் விமான பயணமும்...

லண்டன் ஜோகனஸ்பர்க் இடையேயான பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடுவானில் நடந்த சம்பவமொன்று....

ஐம்பது வயது மதிக்கத்தக்க பிரித்தானிய பெண்ணொருவர் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.அவருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு கருப்பின இளைஞர். நிறவெறி கொண்ட இந்த அம்மையாரால் இதை ஜீரணிக்க இயலவில்லை.

விமான பணிப்பெண்ணை அழைத்து எப்படி என்னை ஒரு கருப்பினத்தவரின் பக்கத்து இருக்கையில் அமர்த்தலாம். தன்னால் ஒரு நொடி கூட இந்த இருக்கையில் இருக்கமுடியாது. உடனடியாக தனக்கு வேறு இருக்கை மாற்றித்தர வேண்டுமென கூச்சலிட்டிருக்கிறார். பணிப்பெண்ணோ தான் வேறு இடம் பார்ப்பதாகவும் அதுவரை பொறுமை காக்கவும் என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து திரும்பிய விமான பணிப்பெண் எக்கானமி வகுப்பில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருப்பதாக கூறவும் அவசரப்பட்ட வெள்ளையின பெண்மணி விமான காப்டனிடம் சொல்லி தனக்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறு மிரட்ட....பணிப்பெண்ணோ, தான் காப்டனிடம் பேசிவிட்டதாகவும், பிஸினஸ் கிளாஸும் முழுமையாக இருக்கிறது ஆனால் முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகவும் ஆனால் அப்படி அமரச்செய்யும் வழக்கமில்லையென்றும்....

நிலமையை கருத்தில் கொண்டு கேப்டன் அந்த இருக்கையை வழங்க சம்மதித்திருக்கிறார் என சொல்லி முடிக்கவும் அந்த வெள்ளையின பெண்மனி பெருமிதமாக கிளம்ப எத்தனிக்க...பணிப்பெண்ணோ அந்த கருப்பின இளைஞனிடம் கேப்டன் உங்களை தனது விருந்தினராக முதல் வகுப்பிற்கு அழைப்பதாக கூற விமானத்தில் இருந்த அனைவரும் எழூந்து நின்று கரவொலி எழுப்பினார்களம்.....

காப்டன் செய்தது சரியா....?

ராமர் பாலமும் வானரங்களும்...


இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் இப்போது சேதுசமுத்திர திட்ட பூமாலை.ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ராமருக்காகவும் அவரின் பாலத்திற்காகவும் தங்கள் உடல்பொருள் ஆவி அனைத்தையும் துறக்க சபதமேற்று செயல்படுகிறா தியாக திருவிளையாடலை நூறு கோடி சனங்களும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதால் ஊடகங்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பிழைப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆண்டுகள் பலவாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தினை கடந்த பாரதீயஜனதா தலைமையிலான கூட்டனி அரசு தூசிதட்டி அதை ஆராய ஒரு குழுவமைத்து பின் திட்ட அறிக்கை தயார்செய்து நிதியெல்லாம் ஒதுக்கி...வைக்கோவும்,கலைஞரும் தங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்து இந்த திட்டத்திற்கு பணம் தருவதைப் போல இதற்கு உரிமை கொண்டாடிய கூத்துக்களை நிறைய பேர் மறந்திருப்பீர்கள்....

புதிதாய் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆர்பாட்டமாய் ஒரு விழா நடத்தி இத்திட்டத்தை துவக்க பிடித்தது சனி....நமது முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சுற்று சூழல் ஆர்வலராய் மாறி இது கூடாது என எழுப்பிய கூச்சல் காற்றில் கரைந்து போனதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இது குறித்த கட்டுரை ஒன்றினை எழுதுவதை விட இதுகாறும் வலையில் இது தொடர்பாய் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே தொகுக்கும் முயற்சியே இந்த பதிவு....


இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்)

உணர்வுகளின் கருத்துக்கள விவாதம்

நேர்மையின் வலைப்பதிவு

தமிழக பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசனின் அறிக்கை என கூறிடும் பதிவு

கீற்று தளத்தில் வெளியான பெரியார்முழக்கம் பதிவு

ஆயிரத்தில் ஒருவன்...


கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை...
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை...
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை...
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை...