அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Wednesday, May 28, 2008

தூவல் கொட்டாரத்திலிருந்து பாண்டி அன்னை வரை...

சனிக்கிழமை மதியம் சேனல் மேய்ந்து கொண்டிருந்த போது ஏசியா நெட்டில் தூவல்கொட்டாரம் ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் இருந்து மளையாள படங்கள் என்றாலே ஒரு கிக்தான். என்ன ஒரு வித்தியாசம் அப்போது படத்திற்கு இடையே வரும் பிட்டுக்காக படம் பார்த்தேன், இப்போது படங்களை பார்க்கிறேன்....அவ்வளவே. மளையாள படங்களில் வரும் கிராமமும் அது சார்ந்த சூழலும் அதன் மக்களும் என்னை கவர்ந்ததுண்டு. அடுத்த பிறவி என ஒன்றிருக்குமானால் கேரளாவில் ஏதாவது ஒரு கிராமத்தின் வசதியான ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டுமென நினைத்திருக்கிறேன். இந்திய அளவில் மிகச்சிறந்த நூறு நடிகர்கள் என பட்டியலிட்டால் அதில் நிறைய மலையாளா நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.

தூவல் கொட்டாரமும் கிராமிய பிண்ணனி சார்ந்த ஒரு கதைதான்...கதையெல்லாம் சொல்லி உங்களை கொடுமைப்படுத்தப் போவதில்லை.வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். மிகச்சிறந்த படமென்று சொல்லமுடியாது, ஆனால் கீராமீயமும் அதன் மக்களும்,உறவுகளும் முடிந்தவரையில் பாசாங்கில்லாமல் நகைச்சுவையாக பதியப்பட்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. எல்லாம் சரிதான் இதுவரையில் தூவல்கொட்டாரத்திற்கு அர்த்தம் தெரியாது...அழகிய மளையாள சேச்சிகள் யாராவது என் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வந்தால் சந்தோஷப்படுவேன்.

படம் பார்த்து முடித்த கையோடு பாண்டிச்சேரி கிளம்பினேன்...திட்டமிட்ட பயணம் இல்லை...திடீரென தோன்றியது. பாண்டிச்சேரி பக்கம் அடிக்கடி போயிருந்தாலும் அரவிந்தர் ஆசிரமத்திறகு போனதில்லை. இந்த முறை அரவிந்தாஸ்ரமம் சென்றுவிட்டு ஆரோவில் போய்வருவது என தீர்மானம். ஐந்தரை மணிவாக்கில் கிளம்பி திண்டிவனம் போய் அப்டிக்கா லெஃப்ட்ல கட் பண்ணி பாண்டிச்சேரியை முத்தமிட்டபோது ஏழரை. வழக்கமாய் டேராப் போடும் 'மாஸ்'ஸில் முகம் கழுவி கடற்கரை போய் குடும்பமாய் பத்து மணி வரை அரட்டையடித்துவிட்டு, அஞ்சப்பரில் ஒரு கட்டு கட்டிவிட்டு அறை திரும்பியபோது சந்தோஷமாய் உணர்ந்தேன்.


(எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது கேட்டுப்பாருங்கள்)

காலையில் அரவிந்தாஸ்ரமம், பெரிய வளாகமாயிருக்குமென நினைத்திருந்தேன், ஏமாற்றமாய் போய்விட்டது. ஒரு வீடும் அதன் பக்கத்தில் தோட்டம் மாதிரியான இடத்தில் அரவிந்தர் மற்றும் மதர் என்றழைக்கப்படும் அன்னையும் ஒரே சமாதியில்.....எல்லோரும் மண்டியிட்டு சமாதியில் தலைவைத்து கண்மூடி தியாணித்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள் எல்லாரையும் விரட்டிக் கொண்டிருந்தார். சமாதியை சுற்றி நிறைய பேர் உட்கார்ந்து தியானம் செய்துகொண்டிருந்தனர். எனக்கும் தியானம் செய்யவேண்டுமென ஆசைதான், ஆனால் மனது அலைகிறது. மவனே எத்தனை நாள் அலைவே...என்னிக்காவது ஒரு நாள் அடங்குவேல்ல அன்னிக்கு தியானம் பண்ணிக்கிறேனென தியானத்தை தியாகம் செய்தவன் நான். சமாதியில் நானும் மண்டியிட்டு தலைவைத்து கண்னை மூடினேன், வித்தியாசமாய் ஏதும் தோன்றவில்லை.... பின்னால் விரட்டிய ஆசாமியின் முகம்தான் நியாபகத்துக்கு வந்து தொலைத்தது.

அந்த வீட்டில் அரவிந்தர் தொடர்பான நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.எனக்கு அரவிந்தரைப்பற்றி எதுவும் தெரியாது, அதன் பொருட்டு நாலைந்து தமிழ்புத்தகங்களை வாங்கினேன். அரவிந்தரின்,'எனது சிறை அனுபவம்' என்ற புத்தகத்தை முதலில் வாசிக்க நினைத்திருக்கிறேன். இந்த வருடத்திற்குள் வாசித்தாகவேண்டும்.

ஆரோவில் போய் ஏமாந்தது தனிக்கதை, எழுதுகிற எனக்கே இந்த இடத்தில் சலிப்பு தட்டுகிறது...பாவம் பிழைத்துப் போங்கள். இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.


இரண்டாம் சொக்கன் என்கிற பெயருக்கான காரணத்தைக் கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களும்,தொலை பேசி அழைப்புகள் வந்து தொல்லை செய்வதாக நினைப்பதால் எதிர்வரும் பதிவொன்றில் அதை பகிர்ந்து கொள்கிறேன்....ஹி...ஹ்ஹி...ஹி

Tuesday, May 20, 2008

அடுத்த நிதியமைச்சரும், பிரியாணிக்கடையும்

கொள்ளிக்கட்டையால் தலை சொறிந்தால் எப்படியிருக்கும்....அப்படித்தானிருக்கிறது சென்னை வெய்யில். என்னை சுற்றி அத்தனை பேரும் விடுமுறையை கொண்டாடிவிட்டு வந்து என் வயிற்றெறிச்சலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கமிட்மெண்ட்களை நினைத்தால் தூக்கமே வருவதில்லை. இதில் விடுமுறையாவது வெங்காயமாவது......

எனக்கென்னவோ கலைஞர் சாதுர்யமாய் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டாரோ என நினைக்கிறேன். என்னவெல்லாம் நடக்கும் என இப்போதே சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசில் இருந்து கலைஞர் விலகமாட்டார். ஆனால் காங்கிரஸிடம் இருந்து விலகுவார்.

தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்டுகள், திருமாவளவன்,முஸ்லீம் லீக் இவர்களோடு வாசன் கோஷ்டி சேர்ந்து கொள்ளும்.

பாரதீய ஜனதா கட்சியுடன் அம்மா வேண்டா வெறுப்பாய் கூட்டனி வைத்துக் கொள்வார். வைக்கோ வழக்கம் போல தமாஷ் பண்ணுவார்.

கேப்டன் நாற்பது தொகுதியிலும் அம்மாவின் ஓட்டை பிரித்து தி.மு.க கூட்டனி வெற்றிக்காக பாடுபடுவார்.

சிதம்பரத்தின் புண்ணியத்தால் பாரதீய ஜனதாகட்சி நாடெங்கும் நிறைய இடத்தில் ஜெயித்துத் தொலைக்கும்.

மூன்றாம் அணி கோமாளிகள் லல்லு, முலாயம், மாயாவதி, கம்யூனிஸ்ட் எல்லாருமாய் சேர்ந்து சந்திரபாபு நாயுடுவை அடுத்த பிரதமராக்குவார்கள்.

வழக்கம் போல டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராய் தொடர்வார்.

இதுதான் நடக்கப் போவுது.......

கொஞ்சம் முயற்சி செய்தால் எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் ஒருவர் கஜினி முகமது கணக்காய் போரடிக்கொண்டிருக்கிற அல்லது கிடைக்க வாய்ப்பிருக்கிற அம்மா கட்சி சீட் அவரின் வயதின் காரணமாய் இளைஞனான எனக்குத் தரப்பட்டால்.....ட்ட்டொட்டடாய்ங்.....ஹி..ஹி... அம்மா அடுத்த பிரதமரானால் .நான் நிதியமைச்சராகிட வாய்ப்பிருக்கிறதா என இனிமேல்தான் பிரசன்னம் பார்க்க வேண்டும். மனசாட்சி, மானம் வெக்கம் எல்லாத்தையும் கழட்டி எதாவது ஒரு வங்கியில் ஐந்து வருசத்துக்கு பிஃக்ஸட் டெப்பாசிட்டில் போட்டு விட்டு கட்சி உறுப்பினர் அட்டை வாங்க வேண்டியிருக்கும். என்ன கொடுமையிது. ஏன் இப்படி விபரீதமாய் யோசிக்கிறேன். ஜீரணிக்கவே முடியலை....இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனை வரத்தான் வேண்டுமா....

நானும் தமிழ்நாடெங்கும் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். இப்போது கடைசியாய் செட்டிலாகியிருப்பது அண்ணாநகர் தபால் தந்தி அலுவகத்திற்கு பக்கதிலிருக்கும் அலஹாபாத் வங்கிக்கு அடுத்திருக்கும் 'சோனாபெல்' தான். சின்ன கடைதான்...உட்கார்ந்தெல்லாம் சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய்தான் சாப்பிடவேண்டும். அண்ணா நகர் பக்கம் வந்தால் ட்ரை பண்ணி பாருங்கள். கடந்த பத்து வருசமாய் அதே ருசி...எப்படித்தான் மெய்ண்டெய்ன் பண்ணுகிறார்களோ தெரியவில்லை. இந்த கடைக்கு நிறைய பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் எனக்கு தெரிந்த இரண்டுபேரில் ஒருவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி, இன்னொரு பிரபலம்...ஹி...ஹி...நாந்தேன்...

வடபழனி சிக்னலில் இருந்து கோயம்பேடு சிக்னல் வரைக்கும் இம்புட்டுத்தான் எளுத முடிஞ்சது......

இன்றைக்கு இத்துடன் முடித்துக் கொல்கிறேன்....ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

Monday, May 19, 2008

கந்தனுக்கு அரோகரா...





குறிஞ்சி நிலத்து குமரனுக்கு பிறந்த நாளுக்காய் நம்ம மொய்...

ஹேப்பி பர்த்டே பாஸ்....

விஷ்ஷிங் யு மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் அஃப் த டே...

லாங் லிவ் டமில் காஃட்

Thursday, May 15, 2008

துறைசார்ந்த பதிவுகளும் தமிழ்மணமும்..

துறைசார்ந்த பதிவுகள் எங்கே?

யாரும் துறை சார்ந்த பதிவுகளை கண்டுக்காததனால தூக்கீட்டாங்களா, இல்லை அதுல யாரும் உருப்படியா எழுதலையா?

இடநெருக்கடியாக் கூட இருக்கலாம்.

கன்ஸிடர் பண்ணுங்கப்பா....சந்தோசப்படுவம்ல.

ஹி..ஹி...இதை மெனக்கெட்டு சொல்ல கொஞ்சம் சுயநலமும் இருக்கு.

Monday, May 12, 2008

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...





தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....

ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து காப்பியடிக்கத்தான் வேண்டுமா....ம்ம்ம்ம்ம்

Sunday, May 4, 2008

ஃபைவ் ஸ்டார் சாமியும், மொபல் பதிவுகளும்

புதிதாய் எழுத ஏதுமில்லைதான், அதற்காக எழுதாமல் இருந்து விட முடியுமா என்ன? குறுதி அழுத்தம் எகிறிக்கொண்டிருப்பதால் இனி காருக்கு ட்ரைவர் கட்டாயம் என்கிற ஹைகமாண்ட்டின் அதிரடி சட்டத்தை எதிர்த்து பொங்கியெழுந்து போராடி பலனில்லாமல் போகவே இப்பொழுதெல்லாம் பின் சீட்டில் பெரிய வெங்காயம் போல உட்கார்ந்து தீவிரமாய் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். நேற்று கிழக்கு பதிப்பகத்தின் சிரிப்பு டாக்டர் படித்தேன். இன்றைக்கு கிரிவலம் பற்றிய புத்தகம் எடுத்து வந்து படிக்காமல் உங்களுக்காக இதை லாப்டாப்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்று இரவு ஏதோவொரு ஹிந்தி ச்சானலில் 'கேம்ளர்' என்கிற படத்தை பார்த்தேன். தேவ் ஆனந்த் மாதிரியான சவடாலான ஸ்டைல் ஹீரோ இடத்தை நிரப்ப இதுவரை இன்னொரு ஆள் வரவில்லையென்றுதான் நினைக்கிறேன், ராஜேஷ் கண்ணா இந்த இடத்தை ஓரளவிற்கு பிடித்தார் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நமது நடிகர் திலகம் கூட நிறைய படங்களில் தேவ் ஆனந்தின் ஸ்டைலை காப்பியடித்திருக்கிறார். எனக்கும் தேவ் ஆனந்த், ஷம்மி கபூர் போன்ற கோமாளித்தனமான ஹீரோக்களைத்தான் பிடிக்கிறது. இந்த வகையில் நமது ஜெமினியும் சேர்த்தி.

வேலூர் தங்க கோவிலுக்கு பிரியங்கா போனார் என்கிற செய்தியை படித்தவுடன், தில்லியிலிருந்து வந்து பார்க்கும் அளவிற்கு என்ன இருக்கிறது என்கிற ஆவலில் நேற்று காலையில் காரை விரட்டிப்போனேன். வேலூருக்கு போய் பத்து பன்னிரெண்டு வருசம் ஆகியிருந்ததால் வேலூரின் வளர்ச்சியை பார்த்து பிரம்மித்தென். மானாமதுரை ரேஞ்சிற்கு இருந்த வேலூர் இன்றைக்கு போஷாக்காய் இருக்கிறது. கோட்டையை சுற்றிய அகழியில் படகுச்சவாரி செய்பவர்களை பார்க்க பரிதாபமாய் இருந்தது. (எத்தனை நாளைக்குத்தான் பொறாமைப்படுவது...ஹி..ஹி..).

வேலூரை தாண்டி ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் ஸ்ரீபுரம் என்கிற இடத்தில் அநியாயத்துக்கு பிரம்மாண்டமாய் கட்டியிருக்கிறார்கள். அநேகமாய் இந்தியாவின் முதல் 5ஸ்டார் கோவில் என்கிற பெருமையை இந்தை கோவில் தட்டிக் கொண்டு போகும். எங்கு திரும்பினாலும் இறைக்கப்பட்ட பணம்தான் தெரிகிறது. தர்மதரிசனம், கட்டண தரிசனம் இங்கேயும் உண்டு, ஞாயிற்றுகிழமைகளில் 100 ரூபாய், வார நாட்களில் 250 ரூபாய். எல்லாமே பெரிது பெரிதாய் இருப்பதால் ஏதோ எக்ஸிபிஷனுக்குள் நுழைந்த உணர்வுதான் வருகிறது.

கருவறையில் எனது குருவினை மனதில் தியானித்து வணங்கினேன். இப்பொழுதெல்லாம் குருவழிபாட்டில்தான் மனம் லயிக்கிறது. குருவை மிகையாக ஆராதிக்க வேண்டிய அவசியமில்லை. குருவின் அனுசரனையையும், வழிகாட்டுதலையும் நினைத்து வணங்கினாலே அது குருவழிபாடு என நினைத்திருக்கிறேன். இது குறித்து சித்தர்கள் பித்தர்கள் பதிவின் தொடர்ச்சியில் பார்ப்போம். கோவிலில் மிக நேர்த்தியாக உங்களிடம் இருந்து பணம் வசூலிக்க நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்கள் செலவழித்து விட்டு வரலாம்.

கோவிலின் எதிரில் இதை நிர்மாணித்த நாராயணி பீடத்தின் சாமியார் இருக்கிறார். அவரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். அவரை எல்லோரும் நாராயணி அம்மா என்கிறார்கள். அவரை பார்த்த்தவுடன் அதிர்ச்சியாய் போய்விட்டது. வயதான ஆசாமியாய் இருப்பார் என நினைத்தால் 32 வயது இளைஞர். எனது நண்பன் ஒருவன் மெலிவாய் இருந்தால் எப்படி இருப்பானோ அத்தகைய தோற்றம். இத்தனை சின்ன வயதில் இவரால் இத்தனை பெரிய நிர்மாணம் செய்ய முடியுமானால் அவரின் நிர்வாக ஆளுமை குறித்த வியப்பில் எனக்கு மரியாதையே தோன்றியது. அவரின் ஆசிரமத்திற்குள்ளேயே ஒரு கோவில் இருக்கிறது. அதற்கு அவர் பூசை செய்து கொண்டே போக செம்மறியாடுகளாய் பக்தர்கள் பின் தொடர நானும் தொடர்ந்தேன். கடைசியாய் நன்கு கொழுத்த பசுவொன்றிற்கு கோபூஜை செய்தார், உட்கார்ந்து முழுதாய் பார்த்துவிட்டு வந்தேன். கொஞ்சம் முயற்சித்திருந்தால் அவரை தனியாக சந்தித்திருக்கலாம். கொடுத்து வைக்கவில்லை...யாருக்கு என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ நாராயணி அம்மாவாகிய இவர் துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மியின் சொரூபம் என ஆசிரம நிர்வாகி ஒருவர் பயபக்தியுடன் சொன்னார். அவர் நம்பிக்கை அவருக்கு, நாமென்ன சொல்ல முடியும்.மொத்தத்தில் சென்னைக்கு அருகாமையில் போய் வர ஒரு பிக்னிக் ஸ்தலமாக இதை கொள்ள குடும்பத்துடன் முடிவு செய்தோம். மாலை நேரத்து விளக்கொளியில் கோவில் இன்னமும் சூப்பராய் இருக்குமாம்...போய்த்தான் பாருங்களேன்.

இதை நெல்சன் மாணிக்கம் ரோட்டின் ட்ராபிக் நெரிசலில் சிக்கி விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த முயற்சி ஒர்க்கவுட் ஆகுமானால் இனி இதுமாதிரி நிறைய பதிவுகளை போட்டுக் கொல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.