அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Tuesday, February 26, 2008

வானில் பறந்த சித்தர்....

திருவண்ணாமலையில் சித்தர் ஒருவர் வானில் பறந்ததை ஒரு மின்வாரிய ஊழியர் தனது அலைபேசியில் படம் பிடித்திருப்பதாக ஜெயா டிவி செய்தியினை இன்றுதான் பார்த்தேன்....



கொஞ்சம் சுவாரஸ்யமான படத்துணுக்கு இது....இது குறித்து விரிவாக எழுத என்னிடம் தகவல்கள் நிறையவே இருக்கிறது...நேரம்தான் இல்லை...

எனவே படத்துணுக்கினை பார்த்து ரசிக்குமாறு(!) வேண்டுகிறேன்.

மேலேயுள்ள படத்துணுக்கு தெரியாதவர்களுக்காய் இந்த யுட்யூப் தொடுப்பு...இது அத்தனை தெளிவாக இல்லை...

Tuesday, February 19, 2008

இதக் கேட்டீங்களா....

மொதல்ல இந்த பாட்ட கேளுங்க....நம்ம ஆளுங்க நெறய பேர் மறந்து போன பாட்டு இது....என்னால மறக்கவே முடியாத பாட்டு...ம்ம்ம்...

இந்த படத்த எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது...அந்த வயசுல அப்படி ஒரு கிறுக்குத்தனமா பார்த்த படம்....அதுக்கு நெறைய காரணமிருக்கு...ஹி..ஹி..

என் வரையில் ஹிந்தியில வந்த அருமையான காதல் பாடல்கள்ள இதுவும் ஒன்னு...நம்ப எஸ்.பி.பி யும் லதா மங்கேஷரும் குழைந்து,இழைந்து,கரைந்து போயிருக்காங்க...



இன்னொரு லிங்க்

சல்மான்ககன் சுரத்தே இல்லாம பாடி வெறுப்பேத்தினாலும், நம்ம மாதுரி பூவா மலர்ந்திருக்காங்க...பாருங்க பார்த்துட்டு சொல்லுங்க....

நம்ம டாக்டரம்மாவுக்காக இங்க ட்ரான்ஸ்லேஷனும் கொடுத்திருக்கேன்....எப்டி இருக்குன்னு கேட்டுட்டு சொல்லுங்க.....
ham aapke hai.n kaun...Who am I to you?...
bechain hai merii nazarMy gaze is restless
hai pyaar ka kaisa asarWhat an effect love has on me!
na chup raho itna kahoDon't stay quiet; tell me at least this much:
ham aapke...aapke hai.n kaunWho am I... who am I to you
khud ko sanam roka baDaSo many times I stopped myself, beloved
aakhir mujhe kahana paDabut at last, I had to speak
khwaabo.n me.n tum aate ho kyo.nWhy do you enter my dreams?
ham aapke...aapke hai.n kaunWho am I... who am I to you
bechain hai merii nazarMy gaze is restless
hai pyaar ka kaisa asarWhat an effect love has on me!
hai hosh gam puuchho na tumIt is a constant worry; don't ask me
ham aapke...aapke hai.n kaunwho I am... who I am to you
kaise kahuu.n dil kii lagiiHow shall I tell you of my heart's desire?
chehara mera paDH lo kabhiiRead my face sometime
yeh sharm kii surkhii kaheThe blush on my face may tell you
ham aapke...aapke hai.n kaun...who I am...who I am to you

Sunday, February 17, 2008

யாரு யாரை காப்பி அடிச்சிருக்காங்க?



Tuesday, February 12, 2008

காதலிக்க நேரமில்லை...ம்ம்ம்ம்


காற்றில் ஆடும் முடிகளுக்கு
கருணையற்ற மனது
கவிதை பேசும் இதழ்களுக்கு இரக்கமற்ற இயல்பு
தழும்பவைக்கும் தேவதைக்கு
தவமிருக்கும் கண்கள்
குலுஙக வைக்கும் குறும்புகளோ
கிறங்க வைக்கும் தென்றல்
அகன்ற நெற்றி அலைபாயும் விரல்கள்
அகலாமல் நிற்கும் புருவங்கள்
இவையனைத்தும் நிறைந்தவள் என்னவளே.


தரையில் படாமலிருக்க
பாவாடையை
தூக்கிப் பிடித்து நடக்கிறாய்
உன் பாதங்களே
தரையில் நடக்கும் போது
பாவாடையை காப்பாற்றி
என்ன செய்து விடப் போகிறாய் !!!!



ஒன்றாய் கரைகிறோம்
உன் பெயரை
எழுதும் போது நானும்
எழுதி முடித்தபின்பு
படிக்கும் போது நீயும்



இன்னும் நிறைய எழுத ஆசைதான்....நேரமில்லை...ம்ம்ம்ம்ம்ம்....

(இங்கு குறிப்பிடபட்டிருக்கும் கவிதைகள் என்னுடையவை அல்ல....)

Monday, February 11, 2008

வட்டவட்டமா யோசிச்சப்ப்ப.....

ஏதோ ஆர்வகோளாறுல நானும் கலந்துக்கறேன்னு ரெண்டு மூணு படத்தோட போட்டிக்கு வந்தேன், திருவிளையாடல் நக்கீரர் கணக்கா சபையில எல்லாரும் உன் போட்டாவுல குத்தம்னு சொல்லீட்டீங்க...மனசே கேக்கலை...

ஆஹா மொதவாட்டியே இப்டி குப்றிக்கா வுளுந்துட்டோமேன்னு ரொம்ப ஃபீல் ஆகி, என்ன படம் போடலாம்னு யோசிச்சப்ப....எங்க ஏரியா வட்டச்செயலாளர் படத்த எடுத்து போடலாம்னு பொறி தட்டுச்சி, அப்புறம் நீங்கள்லாம் இந்த புள்ளைக்கு இம்பூட்டு அறிவான்னு மூக்கு மேல வெரலவச்சி கண்ணு போட்டுட்டா என்ன பண்றது...ஹி..ஹி...

அதான் எல்லார் மாதிரி நாமளும் வட்டமா தெரியற நாலஞ்சு ஐட்டத்த புடிச்சிபோடுவோமேன்னு போட்ருக்க்கேன்.....

இந்த படமெல்லாம் ஒரு தயாரிப்பும் பண்ணல....நம்ம அலைபேசி கருணையால சுட்டது...இதை எப்படி போட்டீல இனைக்கறதுன்னு தெரியல....ஆராச்சும் சொல்லி குடுங்க...
















Thursday, February 7, 2008

பிப்ரவரி மாத புகைப்பட போட்டிக்கு நம்ம மொய்....






இங்க சபையில எல்லாரும் படங்காட்றாங்க...நாம மட்டும் தேமேன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கமேன்னு தோணிச்சி, எல்லாரும் நல்ல நல்ல காமெரா வச்சி சூப்ப்ரா எடுக்கறாங்க, நமக்கு அதுக்கெல்லாம் கொடுப்பினையில்லையா....அதான் நம்ம கைபேசி கேமராவுல எக்க்க்க்க்க்க்க்கச்சக்கமா சுட்டதுல இது ரெண்டுதான் தேறிச்சி...அதை சபை நடுவுல வைக்கிறேன்....எல்லாருமா சேந்து இந்த தடவ சிறந்த வளரும் கலைஞன்(?) அப்டீன்ற பட்டத்த எனக்கே கொடுக்கனும்னு பணிவா கேட்டுக்கறேன்....ஹி..ஹி....

Wednesday, February 6, 2008

நான் மீன் பறவைகள் - 3

மீன் வளர்த்து பெரிய மீன் யாவாரியாகி விடுவது என முடிவுபண்ணி, தீவிரமா தொழில்ல குதிக்கறதுக்கு முன்னால சோதனை முறையில வளர்க்கலாம்னு இடம் தேடினப்போ, எங்க பண்ணை வீட்ல ஆசை ஆசையா கட்ட ஆரம்பிச்சி,குடும்பத்துக்குள்ள நடந்த குத்து வெட்டு(சொத்து தகராறுங்கோவ்)காரணமாய் பாதியிலயே நின்னுபோன நீச்சல்குளம்தான் நினைவுக்கு வந்துச்சி.

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சிரலாம், நீச்சல் குளத்தை யூஸ் பண்ணின மாதிரியும் ஆச்சு, வீட்ல இருக்கறவய்ங்கள வெறுப்பேத்தின மாதிரியும் ஆச்சுன்னு அந்த குளத்துல தண்ணீர் நிரப்பினேன்.மீண்டும் விதைபண்ணை, பெரியவரிடம் ஆலோசனை....கெளுத்தி மீன் வளக்கலாம்னு சொன்னார், ஆனா அப்ப அவங்ககிட்ட எனக்கு தர விதைகள்(!) இல்லை...அத்தனை டிமாண்ட். பக்கத்துல இருக்கிற இன்னொரு பார்ஃம்ல கேட்டா, அவங்க ஒரு வாரம் தள்ளி வரச்சொன்னாங்க....போனேன்.

கொல்கொத்தாவுல இருந்து வந்திருச்சி, கொஞ்சம் பொறுங்க இப்ப வந்துரும்னு சொன்னாங்க...கவுண்டர் மாதிரி அடங்கொக்கமக்கா வெஸ்ட்பெங்கால்ல இருந்து லாரில கொண்டு வர்றாய்ங்களா...வெளங்குன மாதிரித்தான்னு நினைச்சிட்டு உக்காந்திருந்தேன். லாரியும் வந்துச்சு, பெரிய பெரிய அட்டைபெட்டி நீட்டா பேக் பண்ணி ஜெட் ஏர்வேஸ் ஸ்டிக்கரோட....மக்களே நம்புங்க எல்லாம் ப்ஃளைட் வந்திருக்கு....அப்படீன்னா எந்த அளவுக்கு டிமாண்ட்னு யோசிங்க....

ஒரு மணி நேரத்துல அங்க ஒரு மீன் குஞ்சு கூட இல்லை, அத்தனையும் வித்து போச்சு, நான் 2000 கெளுத்தி மீன் குஞ்சு, ஒவ்வொன்னும் 2 ரூபாய்க்கு வாங்கீட்டு வந்தேன்.இனையத்துல மேய்ஞ்சு, அமெரிக்காவுல எப்ப்டி வளக்குறாக, ஐரோப்பாவுல எப்படி வளக்குறக, ஆஸ்த்ரேலியாவுல எப்படி வளக்குறாகன்னு அதிமுக்கியமான தகவல் எல்லாந் திரட்டினேன். என்னுடைய ஜூனியர்ஸ் தவிர வீட்டில் யாரும் இந்த முயற்சியை ரசிக்கவில்லை. நாம இதையெல்லாம் கண்டுக்கற நிலமையில இல்லை....என் இனிய மீன் குஞ்சுகளுக்காய் டயட்சார்ட் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தேன்.....

இப்ப சில தொழில் ரகசியங்கள்.......


இந்த வகை மீன்கள் மூன்றடி அழமுள்ள நீர் நிலைகளில் நன்கு வளரும்.
எத்தனைக்கு எத்தனை பெரிய இடத்தில் வளர்க்கிறோமோ அத்தனை பெரியமீன்களாய் வளரும்.
முதல் மூன்று மாதங்களுக்கு கோதுமை தவிடும், அதன் பின்னர் தேங்காய் புண்ணாக்கும்தான் இவர்களின் டயட்.

ஆறு மாதத்திற்கு பின்னால் கோழிக்குடல் மாதிரியான அசைவ ஐட்டங்களை கொடுக்கலாம்.

மாதத்திற்கு ஒரு முறை புதிய நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள்தூளை கரைத்து குளத்தில் பரவலாய் தெளிக்க வேண்டும்.

ஆறு மாதம் கழித்து மாதம் ஒரு தென்னைஓலையை மட்டையுடன் தண்ணீரில் போட வேண்டும்.மீன்கள் அதில் தேய்த்துதான் தங்கள் தோலை சுத்தப்படுத்திக் கொள்ளுமாம்.


ஒரு வழியாக அமர்களமாய் மீன் வளர்க்க ஆரம்பித்துவிட்டேன், புது பொண்டாட்டிய சுத்தி வர்றவன் மாதிரி நீச்சல் குளத்தையே சுத்தி சுத்தி வந்தேன்...ஹி..ஹி..காலை மாலை இரண்டு வேளையும் நானே தவிடு போட்டேன்...கும்ப்லாய் வந்து கபகபவென சாப்பிடும் அழகே அழகு....எத்தனை டென்சன் இருந்தாலும் அதை பார்த்துக் கொண்டிருந்தால் மனம் லேசாகிவிடும்.

இந்த நேரத்தில்தான் இந்த பதிவின் தலைப்பில் உள்ள மூன்றாவது ஆசாமி உள்ளே நுழைகிறார்...ஆமாங்க பறவைகள்....அங்கே நிறைய மாமரங்கள் இருப்பதால் நிறைய அணில்களும், சிறிய குருவிகளையும் பார்த்திருக்கிறேன்....நான் மீன் வளக்க ஆரம்பிச்சது எப்படி தெரிஞ்சதுன்னு தெரியல...கூட்டம் கூட்டமா கிங்பிஃஷர் என்ன, கொக்கு என்னன்னு...களை கட்ட ஆரம்பிச்சிருச்சி....

குளத்தை சுத்தி தனியா சிக்கின ஹீரோயினை கண்ணில் காமம் கொப்பளிக்க நெருங்கும் வில்லன்களாட்டம் மேற்படி பறவைகள்....என் கண்ணு முன்னாடியே ஏதோ சர்க்கஸ்ல வித்தை காட்ற மாதிரி சொய்ங்னு தண்ணிக்குள்ள டைவ் அடிக்கிறதென்ன...அலேக்கா மீனை வாயில கவ்வீட்டு போறதென்ன....

ஆஹா, இந்த ரேஞ்சுல போனா மொத்த மீனும் ஒரு வாரம் கூட தாங்காது போலயேன்னு டென்சனாய்டுச்சி....பின்ன நம்ம முதலீட்டை தூக்கீட்டு போறாய்ங்களே....ஹி..ஹி...என்னை விட நம்ம பெரிய ஜீனியர்தான் டென்சனாய்ட்டார்.டோர் போட்டு மூடிடலாம்ப்பா,பெரிய ஷீட் வாங்கி கவர் பண்ணீரலாம்னு ஐடியா கொடுக்க, நான் கவலையோடு அதன் சாத்தியங்களை(!) ஆராய ஆரம்பித்தேன்.நம்ம ஹைகமாண்ட் வேற, இத்தனை பறவைங்களுக்கு சாப்பாடு போடுறீங்க எல்லாம் உங்களுக்கு புண்ணியம்தானேன்னு சிரிக்காமல் சீரியஸா பேசி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

கொசுவலை வாங்கி மூடிடலாம்னு யோசிச்சேன், ஆனா கிங்ஃபிஷர் பாயுற வேகத்துக்கு அதெல்லாம் ஜுஜ்ஜிபி, என்ன செய்யலாம்னு குறுக்கு நெடுக்கா கயிறு கட்டி வச்சேன், பயபுள்ளைக அந்த கேப்ல கச்சிதமா போய் மீன அள்ளீட்டு வந்தாய்ங்க....அப்பத்தான் ஒருத்தன் Green House Farming க்கு யூஸ்பண்ற நெட் வாங்கி கட்டீரலாம்னு சொன்னான்.உணக்கு புண்ணியமா போகும்டான்னு நினைச்சிட்டு பாரிஸ்ல நெட் வாங்க அலைஞ்சேன்...

இந்த கேப்ல இன்னொன்னு நடந்து போச்சு, நம்ம ஜூனியர் நம்மள விட டென்சனாகி தாத்தாவிடம் புலம்ப, பேத்தி இம்புட்டு கவலைபடறாளேன்னு டென்சனாகி அடுத்த நாள் ரெண்டு பேரும் காலங்காத்தால போய்ட்டாங்க, ச்சும்மா போகலை அவரோட பிஸ்ட்டலை எடுத்துட்டு...சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளீருக்காங்க, ரஷ்யன் பிஸ்டல் வச்சி கொக்கு சுட்ட பேஃமிலின்னு சரித்திரதுல இடம்பிடிச்சி பேத்தி முன்னால அவர் ஹீரோவாகிட்டார். அஞ்சாறு கொக்கு காலி, நல்லவேளை கிங்ஃஃபிஷர் ஒன்னும் சிக்கலை...

இதெல்லாம் எனக்கு தெரியாது.... வாட்ச்மேன் சொல்லித்தான் தெரியும்,எல்லா கொக்குகளும் வாட்ச்மேனுக்கு பரிசளிக்கப்பட்டதால் மனுசம் ர்ரொம்ப ச்ந்தோஷமா இருந்தார்....ச்ச்சே இப்படி ஆய்டுச்சேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்...ஒரு வழியா மொத்த குளத்தையும் கவர் பண்ணி வலை விரிச்சாச்சு...என்ன கொஞ்சம் செலவு அதிகம்....சோதனை முறையில பண்ணும் போது இதெல்லாம் சகஜமப்பான்னு சமாதானமானேன்...இழந்த மீன்களை ஈடுசெய்ய மேலும் ஐநூறு மீன்களை வாங்கிவிட்டேன்.

தினமும் இரண்டு மூனு கிங்ஃபிஷராவது வலையில் மூக்கு மாட்டிகிட்டு கிடக்கும், எடுத்து விடுவாங்க....அதுக்கப்புறமும் பறவைகள் மொய்க்கிறது குறையல...அப்பத்தான் குஜராத்ல ஒருத்தர் பறவைகளுக்காகவே ஒரு பெரிய பழத்தோட்டம் வச்சிருக்கார்னு ஒரு நியூஸ் படிச்சேன்....எல்லா பழ மரங்களையும் வள்ர்த்து அத்தனையும் பறவைகள் மட்டுமே சாப்பிட விட்டிருக்கார்.

அந்த அளவுக்கு இல்லைன்னாலும், நம்ம லெவலுக்கு செய்வோம்னு அந்த குளத்துக்கு பக்கதுலயே ஒரு கால் ஏக்கர் அளவுக்கு உழுது துவரை விதைச்சேன்...துவரை சீக்கிரமா வளர்ந்துரும்...ரெண்டு மூனு மாசம் கழிச்சி சொன்னா நம்ப மாட்டீங்க...அவ்ளோவ் பறவைகள்...ஓரே சமயத்துல இருநூறு முன்னூறு கிளியெல்லாம் நான் அப்பத்தான் பார்த்தேன்....

ரொம்ப பெரிசா போய்டுச்சோ...அடுத்த பதிவோட முடிச்சிர்றேன்.....

Tuesday, February 5, 2008

Who is the BEST - Infosys, Wipro or TCS?

One day, three consultants, one from Wipro, one from Infosys and one from TCS, went out for a walk. "Why don't we prove who is the best among ourselves?"

Why not, said the other two. The Infosian said "Let's have a test. Whoever makes this monkey laugh, works for the best firm".

Being a pure logical strategist, the person from TCS tried to make the monkey Laugh by telling jokes. The monkey stayed still. As a morepractical consultant, the Wipro guy tried to make funny gestures... No good, the monkey stayed put. Now, comes the Infosian. Being the practical guy he was always trained to be, he whispered something into the monkey's ear, and it burst out laughing at him. The other two were astonished.

So the Wipro guy said "OK, let's take another test. Let's make this

monkey cry!!" So there they went again, applying the same methods as before. The TCS guy narrated sad stories, the Wipro guy made sad gestures, and they failed again. Then, the Infosian again whispered something into the monkey's ear and , oh! It started crying, patting the Infosian's shoulder! The other two justcould not believe their eyes! So the tcs guy said "OK, you've won twice. If you can win just this one, we will bow to you. Let's make this monkey run".

And he barked at the monkey and ordered him to run. Of course, it stayed where it was.. The Wipro guy, true to his type, pushed and prodded the monkey- still No go. So...here comes Infosian, again, and whispers into the monkey's ear. The Monkey just takes off! It runs and runs as fast as it can, as if it was scared to death! The other two surrendered.

They Said: "OK, we give up. You're the best among us, and you work for

the Best firm of the three. But please, please tell us your secret," they begged him.


"Well", said the Infosian , "The first time I made it laugh, I told I work for Infosys . The next time, I told the monkey how much I get paid...so it started crying. And then I told that I was here for recruitment !!!"

பொழுது போவலை...அதான்...

Sunday, February 3, 2008

தமிழச்சிகளுக்கு எச்சரிக்கை....

ஆம், தமிழச்சிகளுக்கு இது எச்சரிக்கைதான், இந்த மட்டிலாவது நிஜங்களை ஜீரணித்துக் கொண்டு தங்கள் நலனை காத்துக்கொள்ள வேண்டியே இந்த எச்சரிக்கை.தமிழச்சிகள்(நன்றாக கவனிக்கவும் தமிழச்சிகள்) இப்போதாவது சுதாரித்துக் கொண்டு தங்கள் உடல் நலனை பேணுமாறு வேண்டுகிறேன்.



வர வர ஸ்லிம்மான தமிழச்சிகளையே பார்க்க முடிவதில்லை என்கிற கவலையால் இந்த பதிவு....ஹி..ஹி...ஆமா நீங்க என்ன நினைச்சீங்க....

Saturday, February 2, 2008

நான் - மீன் - பறவைகள் - 2

ஒரு மாதத்திற்கு இந்த மீன் மேட்டரை மறந்தேவிட்டேன்....அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு வேலையாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் போயிருந்தேன்,வேலை மதியம்தான் முடியும் போலிருந்தது....என்ன கொடுமையிதுன்னு யோசிச்சப்பதான் பூண்டி மீன்விதை பண்ணை நியாபகத்துக்கு வந்தது, சரி ஒரு எட்டு போய் அங்க என்னதான் இருக்குன்னு பார்த்துட்டு வருவோம்னு போனேன்.

திருவள்ளூரில் இருந்து பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் பூண்டி நீர்தேக்கத்தின் கரையோரமாய் ஒரு இரண்டு கிலோமீட்டரில் அந்த விதைபண்னை இருந்தது. சின்னதாய் ஒரு கட்டிடம் அதன் முன்னால் கயிற்று கட்டிலில் ஐம்பதுகளில் ஒரு மனிதர்.என்னடா இது அரசு மீன் விதைபண்ணைன்னு விசிட்டிங் கார்ட் குடுத்தாங்க...இங்க ஒரு பெரிசு உக்காந்திருக்காரேன்னு போய் விசாரிச்சேன். கொஞ்ச நேர பேச்சு வார்த்தையில் சிநேகமாகிப் போனார் பெரியவர்.

விவரம் கேட்க ஆரம்பித்த என்னை,மொதல்ல உள்ள போய் ஒரு ரவுண்டு பார்த்துட்டு வாங்கன்ன்னு சொல்லி வேலையாள் ஒருவரை அனுப்பினார்.கட்டிடத்தை தாண்டி அந்த பக்கம் போனால் திகைத்த்துப் போய் விட்டேன்...ஏறத்தாழ நாற்பது ஏக்கரில், குறைந்தது நூறு குளங்களாவது இருக்கும், ஒவ்வொன்றும் கால் ஏக்கர் அளவில்...ஒவ்வொன்றுக்கும் நம்பர் போட்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி வாயை பிளந்து கொண்டு சுற்றி வந்தேன்.


இந்த நேரத்தில் நன்னீர் மீன்கள் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்....

நன்னீர் மீன் வளர்ப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் நாம் இருக்கிறோம், முதல் இடத்தில் சீனா...அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையேயானது.

கெண்டை, கெளுத்தி, விரால், மடவை, கொடுவா போன்ற இனங்களே பெருவாரியாய் வளர்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில், ஊரில் உள்ள குளங்கள், ஏரிகள், அனைகளில் இந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

தற்போது நிறைய கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் ஏரி/குளங்களை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் தேவைக்கு ஏற்ப குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியாமல், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து குஞ்சுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன


அவர்கள் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா பக்கமும் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். உள்ளே தொழிற்சாலை மாதிரி பரபரப்பாய் வேலை நடக்கிறது.நம்ப முடியாமல் பெரியவரிடம் திரும்பினேன். வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பதாயும், மாதத்திற்கு குறைந்தது பத்து லட்சம் ரூபாய்க்காவது உறுதியான வியாபாரம் இருப்பதாய் வெளிப்படையாக பேசினார். ஏனோ பெரியவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சுடச்சுட மீன் குழம்போடு சாப்பாடு...புளிப்பு தூக்கலான அந்த மீன் குழம்பு இப்போது இதை எழுதும்போது கூட வாயில் நீர் ஊறுகிறது.

முதல் முறை பார்த்துவிட்டு திரும்பும் போது என்னை வெறுங்கையோடு அனுப்பக்கூடாது என பத்து வளர்ந்த கெளுத்தி மீனை கொடுத்தார்....ஒவ்வொன்னும் இரண்டு கிலோவாவது இருக்கும், மார்க்கெட்டில் கிலோ 80-120 வரை விலைபோகும்.திரும்பி வரும் வழியெல்லாம் ஒரே மீன் வளர்ப்பு பத்தின யோசனைதான்...ஒரு படத்தில் எஸ்.வி.சேகரும், பாண்டிய ராஜனும்....மாடு வளர்த்து கோடீஸ்வரனாவதாய் கற்பனை செய்வார்களே...அந்த ரேஞ்சில் யோசித்துக் கொண்டே திரும்பினேன். நிச்சயமாய் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விலகி நிம்மதியான் சூழலில் செய்வதற்கு நல்ல தொழில் அது.

பெரியவர் ஏனக்கு நிறைய ஆலோசனைகளும், தொழில் ரகசியங்களையும் சொல்லியிருந்தார்.முதல் சந்திப்பிலேயே இத்தனை மனம் விட்டு பேசுகிறார் என்றால் நிச்சயமாய் அவர் தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பார் என நினைத்தேன்.அடுத்தடுத்த சந்திப்புகளில் அதை அவர் உறுதி செய்தார்...மனைவி ,குழந்தைகள் தன்னை சரியான முறையில் அங்கீகரிக்கவில்லை, பேசக்கூட காசு கேக்கறாங்கப்பா என ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொன்னார்.கஷ்டமாய் இருந்தது...

அவர் கொடுத்த மீன்களை யாருக்கும் கொடுக்கவோ சமைக்கவோ மனசு வராததால் என் தொழிற்சாலையில், Curing க்கு பெரிய பெரிய தொட்டிகள் வைத்திருந்தோம், அதில் ஒரு தொட்டியில் புதிதாய் நீர் நிரப்பி அதில் வீட்டேன்...அந்த முரட்டு மீன்கள் நீந்துவதை ச்சின்ன புள்ளையாட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெட் வாங்கிக்கொண்டு போனால்....ரெண்டே ரெண்டு மீன் மட்டுந்தான் இருந்துச்சி...ஹி..ஹி...என் தொழிலாளர்கள் நெம்ப நல்லவய்ங்க....பத்திரமா இருக்கட்டுமேன்னு ஆளுக்க்கொன்னா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாய்ங்க போல....என்னத்தச் சொல்றது...ஆஹா இங்க வேலைக்காவாது போல இருக்கே, வேற இடம் பார்த்துற வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன்.

பதிவு நீளமாய்ட்டு போவுது....அதுனால....தொடரும்....