அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, September 17, 2007

ராமர் பாலமும் வானரங்களும்...


இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் இப்போது சேதுசமுத்திர திட்ட பூமாலை.ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ராமருக்காகவும் அவரின் பாலத்திற்காகவும் தங்கள் உடல்பொருள் ஆவி அனைத்தையும் துறக்க சபதமேற்று செயல்படுகிறா தியாக திருவிளையாடலை நூறு கோடி சனங்களும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதால் ஊடகங்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பிழைப்புக்கு பஞ்சமிருக்காது.

ஆண்டுகள் பலவாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தினை கடந்த பாரதீயஜனதா தலைமையிலான கூட்டனி அரசு தூசிதட்டி அதை ஆராய ஒரு குழுவமைத்து பின் திட்ட அறிக்கை தயார்செய்து நிதியெல்லாம் ஒதுக்கி...வைக்கோவும்,கலைஞரும் தங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்து இந்த திட்டத்திற்கு பணம் தருவதைப் போல இதற்கு உரிமை கொண்டாடிய கூத்துக்களை நிறைய பேர் மறந்திருப்பீர்கள்....

புதிதாய் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆர்பாட்டமாய் ஒரு விழா நடத்தி இத்திட்டத்தை துவக்க பிடித்தது சனி....நமது முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சுற்று சூழல் ஆர்வலராய் மாறி இது கூடாது என எழுப்பிய கூச்சல் காற்றில் கரைந்து போனதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இது குறித்த கட்டுரை ஒன்றினை எழுதுவதை விட இதுகாறும் வலையில் இது தொடர்பாய் எழுதப்பட்ட கட்டுரைகளை இங்கே தொகுக்கும் முயற்சியே இந்த பதிவு....


இராமர் பாலம் என்பது கட்டுக் கதை - மறவன்புலவு க. சச்சிதானந்தன் (ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்)

உணர்வுகளின் கருத்துக்கள விவாதம்

நேர்மையின் வலைப்பதிவு

தமிழக பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசனின் அறிக்கை என கூறிடும் பதிவு

கீற்று தளத்தில் வெளியான பெரியார்முழக்கம் பதிவு

0 comments: