அறிந்தறிந்து விடுவது ஞானம்
அறிந்தறிந்து கொள்வது ஞானம்
அறிந்தறிந்து அறிவது ஞானம்
அறிந்தறிந்து தெளிவது ஞானம்
அறிவ தெங்கே அறிந்த தெங்கே?
Tuesday, November 27, 2007
மதுரைக்கு போகாதேடி.....
சமீப நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடல்..நான் தான் கேட்கிறேன் என்று நினைத்தால் சென்னை FM களில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை இந்தபாடலை கேட்க முடிகிறது.
அழகிய தமிழ் மகனுக்காய்...A.R.ரஹ்மான் வார்த்தெடுத்த எங்க ஊர் பாட்டு இது...
அது என்ன எங்க ஊர் பாட்டுன்னு கேக்கறீங்களா...இந்த பாட்டில் பின்னனியில் வரும் தாளக்கட்டு...ஆதிய்ம் அந்தமுமாய் மதுரக்காரய்ங்களுகே உரித்தான பரம்பரை சொத்து....வாடிப்பட்டி செட் இந்த தாளத்தை வாசிக்கும் போது ஈரக்குலையே அதிரும்,சொல்லிப் புரியவைக்கமுடியாது அந்த அனுபவத்தை...அனுபவிக்கனுமய்யா...அதையெல்லாம்...ம்ம்ம்ம்
எனக்குத் தெரிந்து ரஹ்மான் முதல் தடவையா நாட்டுப்புற பாடலை அதற்கே உரித்தான காரம் மணம் குணத்தோடு தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.
கடந்த வாரம் இந்த பாடலோடுதான் மதுரை,திருச்சி, தஞ்சை என சுற்றினேன்.....இன்னும் சலிக்கவில்லை...
நீங்களும் கேட்டுப்பாருங்கள்......
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இப்ப எல்லாம் ஒரே கொசுவத்தியா சுத்தரீங்க...சுத்துங்க சுத்துங்க...
Post a Comment