அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, December 31, 2007

இனியெல்லாம் சுகமே....


ஞானியரின் ஞானத்தை கேள்!
அவசர இரைச்சல் இடையே
அமைதியாக செல்
மௌனத்தின் நிம்மதியை நினைவில் கொள்
முடிந்தவரை சரணடையாமல்
அனைவருடனும் நல்லுறவு கொள்.

உன் உண்மையை
இதமாகத் தெளிவாகக் கூறு
பிறர் கூறுவதை கவனி.
மந்த மூடர்களாயிருப்பவரிடமும்
சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை உண்டு.

பிறருடன் ஒப்பிட்டால்
உனக்கு கசப்பும் சலிப்புமே மிஞ்சும்.
உன்னை விடவும்
உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும்
எப்போதும் உண்டு.
உன் சாதனைகளை மகிழ்வுடன் அனுபவி,
அதே போல் உன் திட்டங்களையும்
மகிழ்ச்சியுடன் அணுகு.

உன் வாழ்வின் பாதை
எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும்
அதில் ஆர்வம் கொள்.
கால மாற்றங்களில்
இதுவே உனது நிரந்தர செல்வம்.

நீ
நீயாக இரு.
அன்பு காட்டுவதாய் நடிக்காதே.
அன்பை ஏளனப்படுத்தாதே.
எல்லா விரோதங்களுக்கும்.
ஏமாற்றங்களுக்கும் அப்பாலும்
அன்பு ஒரு நிரந்தர பசுமை
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
-இரண்டாம் சொக்கன்....

1 comments:

said...

நீ நீயாய் இரு! நம்ம பாலிசி.

உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!