அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, March 31, 2008

நான் ஒரு முட்டாளுங்க.....


ஏப்ரல் ஒன்ணும் நாணும்...

மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு ஏப்ரல் ஒண்ணுன்னா சந்தோஷம்தான், ஏன்னா என்னை மாதிரியான மக்களுக்காக பரிசளிக்கப்பட்ட நாளாச்சே!.....நான் ஒரு முட்டாள் என ஒத்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் தயக்கமே இருந்ததில்லை. ஒரு வகையில் அப்படி சொல்லிக் கொள்வதில் பெருமை கிடைப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

எதுக்கு மறைக்கனும், உண்மையில் எல்லோரும் தங்களின் நிஜங்களை ஒப்புக்கொள்ளத் துவங்கி விட்டார்களென்றால் அப்புறம் புத்திசாலிகளின் என்ணிக்கையும் தற்போது உயிருடன் இருக்கும் டைனோசர்களின் எண்ணிக்கையும் ஒன்றாய்தானிருக்கும். யார் வேண்டுமானாலும் புத்திசாலி மாதிரி நடிக்கலாம், நடிக்க முடியும் ஆனால் முட்டாளாய் நடிப்பதும் கஷ்டம், நடிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.

சக முட்டாள்களுக்கு எனது இனிய முட்டாள் தின வாழ்த்துகள்.....

அப்படியே என்னோட பேஃவரைட் பாட்ட கேட்ருங்க........

11 comments:

said...

முட்டாள் என்று சொல்லிகொண்டு நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..

வாழ்த்துகள்.

said...

பாசமலர்...

மெய்யாலுமே நல்லா எழுதீருக்கேனா....இல்லை ஏப்ரல் 1க்காக சொல்றீங்களா...ஹி..ஹி..ம்ம்ம்

டாங்ஸ் தாயே....

said...

நிறய வசதி இருக்குன்னு சொன்னது உண்மைதான்.. இன்னோன்னு யாரயும் ஏமாத்தி கெட்டபேரும் வாங்காம ஏமாந்தாலும் நல்லவங்க தான் நம்பி ஏமாறுரோம்முன்னு சொல்லி சமாளிக்கலாமே..

said...

கயல்விழி...

பாய்ண்ட்...பாய்ண்ட்...

said...

சொக்கன்ஜி..

இதையெல்லாம் வெளில நாமளே சொல்லக் கூடாது..

அப்புறம் இதை வைச்சே நம்மளை, மத்த 364 நாளும் கும்மியடிப்பாங்க..

மறந்திராதீங்க..

said...

உண்மைதமிழன்...

ஹி..ஹி...சேம் ப்ளட்

said...

டாக்டர்...

அப்ப நானிந்த பதிவை எழுதலையா....ஹி..ஹி...

said...

அப்ப நான் இந்த பதிவு பக்கம் வரவே இல்ல

:)))))))))

said...

புத்திசாலியாய் இருந்து கொண்டு நான் முட்டாள் என்று சொல்லி எல்லோரையும் முட்டாளாக்கி விட்டீர்கள். சரியான ஏப்ரல் ஃபூல் பதிவு தான் போங்கள்

said...

முட்டாளாய் இருப்பதில் நிறையவே சவுகரியம் இருக்கிறது, முதலில் ////உங்களுடைய அங்கீகாரத்திற்கு யாரும் போட்டியாக வரமாட்டார்கள், உங்களை பார்த்து பொறாமை படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.கருத்து திணிப்புகளும், சுற்றுப்புற அழுத்தங்களும் உங்களை ஏதும் செய்யாது......நீங்கள் விரும்புகிற தளங்களில் எவ்வித கூச்சமும் இல்லாமல் எளிதாய் புழங்கலாம். உங்களின் உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படுவீர்க்ள்....அது எத்தனை சுகம் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.////

இதை முதல் சொக்கன் பார்த்தால் அகம் மகிழ்வார்!

said...

எல்லோரும் இந்தப்பதிவு பதிவு என்கிறார்களே என்னாது அது?
தப்பிச்சிட்டோமில்ல...ஹி..ஹி..!