அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Monday, October 8, 2007

நானுந்தான்.....

போன வாரம் மதுரையில் ஒரு நாள்

ஒரு பெரிய வங்கி காலை நேர பரபரப்பில் திணறிக்கொண்டிருக்க....

நான் ஒரு காசோலையுடன் High Value Clearence மூலமாய் அதை உடனடியாய் பணமாக்க வேண்டிய அவசரத்துடன் அணுக, நடைமுறைகளை ச்சுட்டிக்காட்டி என்னை வெறுப்பேற்றிய ஊழியரை எகிறிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கு வந்த ஒரு பெண் ஊழியர் ப(க)ணிவாய் மேளாளர் அறைக்கு வருமாறு அழைத்தார்.

மவனே இருடா! வந்து உன்ன வச்சிக்கறேன்னு கருவிக்கொண்டே அறைக்குள் நுழைந்தால், என்னை அழைத்த அந்த பெண்தான் அந்த கிளையின் மேளாளர்.முப்பதுகளில் பொலிவாய் இருந்த அவரை ரசிக்கிற மனநிலையில் நான் இல்லை...அவசரத்தில் இருந்தேன்.உட்காரச்சொல்லி பிரச்சினனயை கேட்டார்...காசோலையை வாங்கிப் பார்த்து பிரச்சினையில்லை நான் பார்த்துக்க்கொள்கிறேன், நீங்கள் சலான் ஃபில்லப் பண்ணிதாருங்கள் என ஒரு சலானையும் தந்தார்.

இது மரியாதை, என குஷியாகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கும் போது அவர் கேட்டார்....

நீங்க சரவணண்தானே...!

குழப்பமாய் நிமிர்ந்து ஆமென்றேன், அடுத்து .... பையண்தானே என கேட்க ஆச்சர்யமாய் உங்களுக்கு எங்க அப்பாவை தெரியுமாவென கேட்டேன்.சிரித்துக் கொண்டே ஏன் உங்களை தெரிஞ்சிருக்க கூடாதா! என கேட்டவர், என்னை தெரியலையா நான் ....னை என்றார்.

ஹி..ஹி..இந்த இடத்துல ஷாட் கட் பண்ணி ஒரு இருவது வருசம் பின்னால போவோமா!

பதினேழு வயசு வரை அவனுக்கு சைட் அடிக்கறதப் பத்தி பெரிசா எதுவும் தெரியாது ...அம்புட்டு சமத்து, காலைல எல்லா பசங்களும் 8.30 பஸ்ஸில தொங்கிட்டு வரும் போது அவன் மட்டும் மக்கு மாதிரி 8 மணி பஸ்ல உக்காந்து போவான்.டெய்லி க்ளாஸ்க்கு போற முதல் பையன் அவன்தான்.. பைய க்ளாஸ்ல வச்சிட்டு நேர சர்ச்சுக்கு வந்து தனியா உக்காந்திருப்பான்.பாவமன்னிப்பு கேக்க வர்றவங்களை வேடிக்கை பார்க்கறது அவனுக்கு பிடிச்ச அப்போதைய பொழுது போக்கு.8.30 மணி பஸ்ல வர்றவனையெல்லாம் கிறுக்குப் பயலுகன்னு நெனச்சிட்டு இருந்தான் அவன், அதே மாதிரி சாயங்காலம் எல்லாப் பயலும் பஸ்ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருக்கும் போது அவன் முதல் பஸ்ஸுல வீட்டுக்கு போயிருவான்.

ப்ளஸ்2 வந்தப்பதான் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சது அவனுக்கு...ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுபேர் அவன் ஏரியாவுல இருக்கிற இரண்டு பொண்னுங்களை லவ் பண்றதாயும்,அவங்க யாரு, பின்னனி என்னன்னு சொல்ல முடியுமான்னு கேக்க...முதலில் பயந்தாலும் அப்புறம் ஆர்வ கோளாறில் சரி வர்றேன்னு போனான்.

அந்த நாள் அவனுக்கு இன்னிக்கும் மறக்க முடியாது...காதல் படத்துல வருமே அந்த ஸ்கூல் பொண்ணுங்கதான் அவங்க, அதில் ஒருத்தியை அவன் பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்தான். ஆனாலும் பயம்...தினமும் அந்த தேவதையை பார்க்க நண்பர்களுக்கு உதவும் சாக்கில் அவனும் அவர்களோடு ஜோதியில் ஐக்கியமானான். அவனுக்கு அந்த தேவதை அவனை மட்டும் விசேடமாய் பார்ப்பதாயும் சிரிப்பதாயும் தோன்றியது. ஒரு கட்டத்தில் நண்பர்கள் கண்டுபிடித்துவிடவே ஒரு உடன்படிக்கை தயாரானது...மூணு பேரும் ட்ரை பண்ணுவோம் யாருக்கு கிடைக்குதோ மத்தவன் ஒதுங்கிக்கனும்னு.....வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான்.

ஆனால் திருட்டுதனமாய் நண்பர்களுக்கு தெரியாமல் அந்த தேவதையின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்திருந்தான்....சேகரித்த தகவல்களை வைத்துக் கொண்டு அவளை எப்படி அணுகுவது என்றெல்லாம் திட்டம் போட்டாலும் தைரியம் இல்லை.ஒரு வேளை வீட்டுக்கு தெரிந்தால், அவள் முடியாது என சொல்லி அவர்கள் வீட்டில் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டால் என நிஜங்களை நினைத்து பயந்தான், ஆனாலும் அவளை எப்படியாவது தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டுமென்கிற வைராக்கியத்துடன் ப்ளஸ்2 நெருக்கடிகளுடன் போராடினான்.

அம்மா அதிரடியாய் அவனது பின்னனியில் இருந்ததால் ஓரளவு நல்ல மதிப்பெண்களுடன் மூன்று துறைகளும் கிடைக்க மதுரையில் பொறியியல் சேர்ந்தான்.அவனது இரு நண்பர்களும் தேர்வில் பரிதாபமாய் சோடை போனது இன்றும் அவன் வருந்தும் விஷயம்.புதிய சூழல்,புதிய நண்பர்கள்,புதிய பெண்களின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய் தேவதையின் நினைப்பு கரைந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் படிச்சிமூடிச்சி செட்டிலானவுடன் வீட்டில் சொல்லி அவளை துனைவியாக்க வேண்டுமென அரசியல்வாதி போல நீண்டகால திட்டம் ஒன்றை தீட்டினான்.

இங்கன ஷாட் கட் பண்ணிடுவோமா....

வ்வாவ்...அடையாளமே தெரியல என்றேன் நிஜமான ஆச்சர்யத்துடன்.பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டார் அந்த பெண்.வாழ்க்கையில் எப்போதோ பேசவேண்டும் என துடித்த பெண்ணிடம் இப்போதுதான் பேச முடிகிறது. சம்பிரதாயமாய் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம்.நான் நிறைய மாறிவிட்டதாக கூறினார்,நானும் சிரித்துக் கொண்டே அவரும் நிறைய மாறிவிட்டதாய் பொய் கூறினேன்...நிஜத்தில் நான் அவரை மறந்திருந்தேன் என்பதுதான் உண்மை.

விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தபோதுதான் கிறுக்குத்தனமாய் அந்த எண்ணம் தோன்றியது. மீண்டும் அவர் அறையை பாதி திறந்து உள்ளே எட்டிப் பார்க்க அவர் நிமிர....

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே...என சஸ்பென்ஸ் வைத்தேன். அவர் சிரித்தபடியே கண்ணாடியை உயர்த்தி என்ன என்பது மாதிரி பார்த்தார்....

நான் வாழ்க்கையில லவ் பண்ணின முதல் பெண் நீங்கதான் என்றேன்...சிரித்துக் கொண்டே தலை கவிழ்ந்து பைல்களை புரட்டிக் கொண்டே அவர் சொன்னார்....

நானுந்தான்....

சட்டென என்ன சொல்லதென தெரியவில்லை....

இறுக்கம் பரவ...வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு....God bless you...takecare...bye என்றேன் அவரும் சிரித்துக் கொண்டே அதை ஆமோதிக்க திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன்.

மனசு லேசாய் இருந்தாலும் கனமாய் இருந்தது.

14 comments:

said...

ஆஹா...இப்படி நட்சத்திரத்தை கண்டுக்காம இருக்கே தமிழ்மணம்...

மலர் போன்ற மென்மையான நினைவுகள்...

said...

நீங்க God bless youன்னு (மட்டும்) சொல்லிட்டு வந்தீங்கன்னு நாங்க நம்புறோம் பங்காளி! ;-)

said...

மங்கை...

மென்மையான நினைவுகள்தான்....

மகிழ்ச்சியும்,வருத்தமும் இல்லாத ஏகாந்தமான உணர்வுடனே அன்றைக்கு வெளியே வந்தேன்.

said...

தாயே...

இப்படியான நினைவுகள்தான் களைத்துச் சோர்ந்து இளைப்பாறும் வேளையில் உதவிக்கு வருகின்றன.....

said...

காட்டாறு...

இப்டீல்லாம் பேசப்டாது...நான் எம்புட்டு ஃபீல் பண்ணி எளுதீருக்கேன்.

உங்க பங்காளியை நீங்களே சபையில வாரலாமா...ஹி..ஹி...

said...

டாக்டர்...

யாரந்த பங்காளி...ஹி..ஹி..

said...

என்ன கொடுமையிது சரவணா! இத்தனை ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கா? அய்யகோ கேட்க இங்கே தமிழ்குடிமகன் இல்லையா? ட்யூஷன் வாத்தியாரம்மா யாராவது நம்ம மலரும் நினைவுகள்ல இருந்தாங்கன்னா... இறக்கி வையுங்க இங்கே.. நாங்க இருக்கோமுல்ல.

said...

ம்.. அப்படியா..

பதிவுல மனசு லேசாச்சு கனமாச்சுன்னு எழுதிட்டு ..பின்னூட்டத்தில் ஏகாந்தமான்னு என்னய்யா இது ஒரே கதையா இருக்கே...

தலைப்பும் பதிவும் ஒரு நல்ல சிறுகதை மாதிரி இருக்கு. :)

said...

காட்டாறு...

உங்களின் தமிழ் புலமையை மெச்சினோம்...தமிழ்பால் உங்களுக்கு இருக்கும் பற்றை நினைத்து அகம் மகிழ்ந்தோம்

ஹி..ஹி...வேறென்ன சொல்றதாம்

said...

முத்துலட்சுமி...

அப்டிக்கா நீள அகலத்துல யோசிச்சீங்கன்னா...லேசானதும்,கனமானதும் நீக்கமற பரவிய சூழல்தான் ஏகாந்தம்....

புரியலைல...எனக்குந்தான்...ஹி..ஹி..

said...

:)

said...

மனதை தொட்ட பதிவு :)

said...

மலரும் நினைவுகள் அருமை - முதல் காதல் - இளங்காதல் - ஜெயிப்பதில்லை - பல காலம் கழித்து காதலர்கள் சந்திக்கும் போது - மனம் நெகிழும்.

ஆமாம் - நீங்கள் மதுரைப் பொறியியல் கல்லூரியா ?? (TCE)

said...

//
வ்வாவ்...அடையாளமே தெரியல என்றேன் நிஜமான ஆச்சர்யத்துடன்.

வாழ்க்கையில் எப்போதோ பேசவேண்டும் என துடித்த பெண்ணிடம் இப்போதுதான் பேச முடிகிறது
//
கற்பனையோ நிஜமோ தெரியாது ஆனால் நிஜத்தில் நிகழ்ந்திருக்கிறது.