அறிந்தறிந்து விடுவது ஞானம்

அறிந்தறிந்து கொள்வது ஞானம்

அறிந்தறிந்து அறிவது ஞானம்

அறிந்தறிந்து தெளிவது ஞானம்

அறிவ தெங்கே அறிந்த தெங்கே?

Friday, November 23, 2007

சத்யசாய் @ 82



பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலில் நிழலே தெய்வம்...



பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் முடியும்
பயணம் முடிந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்....



பள்ளம்தான் மேட்டினை நிர்ணயிக்கிறது
குள்ளம் தான் உயரத்தினை வடிவமைக்கிறது
இல்லாததை இருப்பதுதான் காட்டுகிறது....

1 comments:

said...

டாக்டரம்மா...

இப்படி ஒண்ணுமே சொல்லாமப் போனா எப்படி...?